’ஒருநாளும் நயனைப் பிரியாத இனிதான வரம் வேண்டி வாங்கியிருப்பாரோ விக்னேஷ் சிவன்?’ என்று சந்தேகப்படும் அளவுக்கு தரமான சம்பவம் ஒன்று நடந்திருக்கிறது. ரஜினி படப்பிடிப்புக்கு நயன்தாரா நாளை மும்பை செல்ல உள்ள நிலையில், தனக்கும் மும்பைக்கு டிக்கட் போடும்படி அதே பட நிறுவனத்துக்கு உத்தரவிட்டிருக்கிறார் விக்னேஷ் சிவன்.

’ஒருநாளும் நயனைப் பிரியாத இனிதான வரம் வேண்டி வாங்கியிருப்பாரோ விக்னேஷ் சிவன்?’ என்று சந்தேகப்படும் அளவுக்கு தரமான சம்பவம் ஒன்று நடந்திருக்கிறது. ரஜினி படப்பிடிப்புக்கு நயன்தாரா நாளை மும்பை செல்ல உள்ள நிலையில், தனக்கும் மும்பைக்கு டிக்கட் போடும்படி அதே பட நிறுவனத்துக்கு உத்தரவிட்டிருக்கிறார் விக்னேஷ் சிவன்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 10 அன்று மும்பையில் தொடங்கவிருக்கிறது. இந்தப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. சுமார் ஒரு மாதம் வரை அங்கு நடக்கவிருக்கும் படப்பிடிப்பில் ரஜினி, நயன்தாரா யோகிபாபு உள்ளிட்ட பலர் கலந்து கொள்கிறார்கள்.

ஏப்ரல் 10 முதலே நாயகியாக நடிக்கும் நயன்தாராவும் படப்பிடிப்பில் இருக்கிறாராம். அதற்காக ஏப்ரல் 9 ஆம் தேதி புறப்பட்டு மும்பை செல்லவிருக்கிறாராம் நயன்தாரா. இது ஒரு புறமிருக்க, இதே லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் புதிய படமொன்றை இயக்கவுள்ளார் விக்னேஷ்சிவன். இந்த ஒரு சாக்கு போதாதா? 

நயன்தாரா படப்பிடிப்புக்காக மும்பை செல்வது முடிவானவுடன், எனக்கும் பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணும் என்று அடம்பிடித்து படத்தின் கதை விவாதம் தொடர்பாக மும்பை செல்லவேண்டும், எனக்கு அங்கே தங்குமிடம் உள்ளிட்ட வசதிகளைச் செய்துகொடுங்கள் என்று தயாரிப்பு நிறுவனத்திடம் கேட்டாராம் விக்னேஷ்சிவன்.

விக்னேஷ் சிவன் நடத்தவிருப்பது என்னவிதமான டிஸ்கஷன் என்று தெரிந்திருந்தும் நயனின் மனம் கோணாமல் நடந்துகொள்ளவேண்டிய நிர்பந்தத்தில் விக்னேஷ் சிவனுக்கு டிக்கெட் எடுத்து அனுப்பிவிட்டதாம் தயாரிப்பு நிறுவனம். அத்தோடு விட்டிருந்தால் பரவாயில்லை. தான் மும்பைக்கு டிஸ்கஷனுக்கு வந்திருக்கும் விசயம் ரஜினி, முருகதாஸ் உட்பட யாருக்கும் தெரியாமல் ரகஸியம் காக்கப்படவேண்டும் என்ற உத்தரவையும் பட நிறுவனத்துக்குப் போட்டிருக்கிறாராம் விக்னேஷ் சிவன்.