சின்மயி வைரமுத்து மீது பல்வேறு குற்றச்சாட்டை முன்வைத்த நிலையில் தற்போது மேலும் பலர் தானும் பாதிக்கப்பட்டு உள்ளதாக சமூக வலைத்தளத்தில் #metoo என பதிவிட்டு வருகின்றனர்.

சின்மயி வைரமுத்து மீது பல்வேறு குற்றச்சாட்டை முன்வைத்த நிலையில் தற்போது மேலும் பலர் தானும் பாதிக்கப்பட்டு உள்ளதாக சமூக வலைத்தளத்தில் #metoo என பதிவிட்டு வருகின்றனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இந்நிலையில் சின்மயிக்கு ஆதரவு குரல் பெருகி வருவதால், வைரமுத்து சற்று மனமுடைந்து காணப் படுவதாக தெரிகிறது.மேலும் சின்மயின் இந்த குற்ற சாட்டுக்கும், காலம் தான் பதில் தரும் என வைரமுத்து அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.இதனை தொடர்ந்து, இயக்குனர் பாரதிராஜாவை வைரமுத்து சந்தித்து மனம் விட்டு பேசி உள்ளத்தாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், ஆண்டாள் விவாகரத்தை மனதில் வைத்து தான் தற்போது எனக்கு இது போன்ற பிரச்சனை வர தொடங்கி உள்ளது என வைரமுத்து இயக்குனர் பாரதி ராஜாவிடம் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.

இனியும் இவ்வாறே அமைதி காத்தால் இந்த பிரச்சனை வேறு விதமாக மாறி விடும். எனவே உடனே நம்ம ஆட்களை அழைத்து பேசி இதற்கு எதாவது முடிவு எடுக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் சினிமா துறையில் தனக்கு பாதிப்பு ஏற்படும் என வைரமுத்து தெரிவித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது