ரணகளமாகும் பிக்பாஸ் வீடு..? யார் உள்ளே வரப்போகிறார் தெரியுமா..?
ரணகளமாகும் பிக்பாஸ் வீடு..? யார் உள்ளே வரப்போகிறார் தெரியுமா..?
பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 2 வரும் 17 ஆம் தேதி ஒளிபரப்பாக உள்ளது.
அதில் யாரெல்லாம் கலந்துக்கொள்ள உள்ளார்கள் என்பதை தெரிந்துக்கொள்ள மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்
அதில் குறிப்பாக சிநேகா, தாடி பாலாஜி மற்றும் பவர் ஸ்டார், உள்ளிட்ட நபர்கள் நிகழ்ச்சியில் பங்குக்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது
இன்னும் 2 நாட்களில்! 😎😎 #பிக்பாஸ் - ஞாயிறு இரவு 7 மணிக்கு உங்கள் விஜயில்.. @ikamalhaasan #BiggBossTamil #VivoBiggBoss @Vivo_India #2DaysToGo pic.twitter.com/6e5Uy89DNi
— Vijay Television (@vijaytelevision) June 15, 2018
இது ஒருபக்கம் இருக்க இன்னொரு ஷாக்கிங் செய்தி என்னவென்றால்,"பிக்பாஸ் வீட்டுக்கு இவர் வந்தால் ரணகளமாகிவிடும் என கமல் தெரிவித்து இருந்தார் அல்லவா...?
அது யாராக இருக்கும் என பலரும் யோசிக்கின்றனர். இந்நிலையில் தான் ஒரு செய்தி வெளிவந்துள்ளது..
15 பிரபலங்கள்.. 60 கேமராக்கள்.. ஒரே வீட்டில்.. நல்லவர் யார்?! 😎 கெட்டவர் யார்?! 😈 #பிக்பாஸ் - ஞாயிறு இரவு 7 மணிக்கு உங்கள் விஜயில்.. @ikamalhaasan #BiggBossTamil #VivoBiggBoss @Vivo_India pic.twitter.com/IIWzJWjcdf
— Vijay Television (@vijaytelevision) June 14, 2018
அதாவது சமீபத்தில், குடும்ப பிரச்சனை காரணமாக காவல் நிலையம் வரை சென்று பல பிரச்சனைகளை சந்தித்து வந்த இவர்கள் தான் பிக்பாஸ் வீட்டில் கலந்துக்கொள்ள உள்ளார்கள் என்ற தகவல் கசிந்துள்ளது
அதாவது, டிஆர்பி ரேட்டிங் உயர வேண்டும் என்பதற்காக பார்த்து பார்த்து போட்டியாளர்களை தேர்வு செய்து வருகிறார்கள் பிக்பாஸ் டீம்
அந்த வரிசையில் இவர்கள் இருவரையும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள வைத்தால் டிஆர்பி எகிறும் என்பதற்காக ஒரு திட்டம் இருக்கிறது
ஒரே வீட்டில் தாடி பாலாஜி மற்றும் அவருடைய நித்யா கலந்துக் கொள்ள உள்ளார்களாம்.
இதை மனதில் வைத்து தான் கமல் "இவர்கள் கலந்துக்கொண்டால் ரணகளமாக மாறி விடும் என தெரிவித்து உள்ளாரா... என்ற சந்தேகம் வலுத்துள்ளது.