சென்னையில் விரைவில் கட்டப்பட உள்ள ஆடம்பர அதிநவீன அப்பார்ட்மெண்ட் வர உள்ள இடத்தில் தமிழ் திரையுலக பிரபலங்கள் பலரும் வீடு வாங்கப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது

சென்னை ஆழ்வேர்பேட்டை சார்மினார் சாலையில் ‘கிரவுன் பிளாசா ஹோட்டல்’ என்ற பிரபலமான 5 ஸ்டார் ஹோட்டல் உள்ளது. பார்க் ஷெர்ட்டன் என்று அழைக்கப்படும் இந்த ஹோட்டல் 38 ஆண்டுகள் பழமையானது. மேலும் சென்னை நகரின் முக்கிய கட்டிடங்களில் ஒன்றான இந்த ஹோட்டலில் 287 அறைகள் உள்ளன. ”கிரவுன் பிளாசா” விஐபிகளுக்காக பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தியது மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் உரிமையாளரின் ஐபிஎல் வீரர்களுக்கான தங்குமிடமாக இது இருந்தது.

இந்த ஹோட்டல் ஆரம்பத்தில் தொழிலதிபர் டிடி வாசுவால் அடையார் கேட் ஹோட்டலாக விளம்பரப்படுத்தப்பட்டது. பின்னர் 2015 ஆம் ஆண்டில், இன்டர்காண்டினென்டல் ஹோட்டல் குழுமம் நிர்வாகத்தை ஏற்றுக்கொண்டது. மேலும் இதுஹோட்டல் கிரவுன் பிளாசா சென்னை அடையார் பூங்கா என மறுபெயரிடப்பட்டது.

ஏசியாநெட்தமிழ்செய்திகளைஉடனுக்குஉடன் Whatsapp Channel-லில்பெறுவதற்குகீழேகொடுக்கப்பட்டுஇருக்கும்லிங்குடன்இணைந்துஇருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இந்த நிலையில் சென்னையின் அடையாளங்களில் ஒன்றான கிரவுன் பிளாசா ஹோட்டல் வரும் 20ம் தேதியுடன் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த இடத்தில் ஆடம்பர சொகுசு அப்பார்ட்மெண்ட் வர உள்ளது. 

சென்னையைச் சேர்ந்த பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனமான பாஷ்யம் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ், அந்த இடத்தில் 130 அதிநவீன சொகுசு அடுக்குமாடி குடியிருப்புகளுடன் இரட்டைக் கோபுரங்களை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. இந்த குடியிருப்பில் 130 ஆடம்பர வீடுகளை கட்ட திட்டமிட்டுள்ளது. இந்த இடத்தில் ஒரு சதுர அடிக்கு சுமார் ரூ.30,000க்கு விற்க கட்டுமான நிறுவனம் திட்டமிட்டுள்ளது. வீடுகள் கட்டப்பட்ட உடன் ரூ.15 கோடி முதல் ரூ.21 கோடி வரை வீடுகளின் விலையை நிர்ணயிக்க பாஷ்யம் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

நேரம் சரியில்ல அதான் தள்ளிவைத்தோம்... ஜோசியம் பார்த்து சலார் பட ரிலீஸ் தேதி மாற்றம் - வெளியான அதிர்ச்சி தகவல்

அனைத்து தளங்களின் மொத்த பரப்பளவு குறியீட்டுக்கான தமிழக அரசின் அனுமதிக்காக பாஷ்யம் காத்திருக்கிறது. இந்த அனுமதி கிடைக்கும் பட்சத்தில் ஒரு சதுர அடி இடத்தை ரூ50,000க்கு விற்கவும் அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாம்.

இந்த நிலையில் இந்த ஆடம்பர அதிநவீன அப்பார்ட்மெண்ட் வர உள்ள இடத்தில் தமிழ் திரையுலக பிரபலங்கள் பலரும் வீடு வாங்கப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இயக்குனர்கள் அட்லீ, நெல்சன், நடிகர் விஜய் சேதுபதி ஆகியோர் இங்கு ஆடம்பர வீடுகளை வாங்கப்போகிறார்களாம். இவர்களை தொடர்ந்து வேறு சில பிரபலங்களும் இங்கு வீடு வாங்கப்போவதாக கூறப்படுகிறது.