Tamil actress open talk about sensational issue

இருட்டுஅறையில் முரட்டு குத்து படம் எக்கச்சக்க அடல்ட் வசங்களோடு திரைக்கு வந்து, மிக மோசமாக விமர்சிக்கப்பட்டாலும் வசூல் வகையில் இன்னும் மேலே தான் போய் கொண்டிருக்கிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

அதே போல இந்த திரைப்படத்தில் நடித்திருக்கும் யாஷிகா ஆனந்த், ஒவ்வொரு முறையும் தனது புது பேட்டிகளின் மூலம், சென்சேஷனலான விஷயங்களை கூறி பப்ளிசிட்டி தேடிக்கொள்கிறார்.

சமீபத்தில் கூட ”திருமணத்திற்கு முன் பெண்கள் கற்பிழப்பது தவறில்லை” என கூறி சர்ச்சையை கிளப்பியிருந்தார். அதனை தொடர்ந்து ”நான் ஒன்றாவது படிக்கும் போதே புளூ ஃபிலிம் பார்த்தேன்” என கூறி பரபரப்பை கிளப்பினார்.

இப்போது என்னவென்றால் சமீபத்தியப் பேட்டியில் ஓவராக ஓபன் டாக் கொடுத்திருக்கிறார். அந்த பேட்டியின் போது யாஷிகாவிடம், நீங்கள் எந்த நடிகருடன் படுக்கையை பகிர்ந்து கொள்ள ஆசைப்படுவீர்கள்? என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு யாஷிகா எனக்கு ரன்வீர் சிங் என்றால் ரொம்ப பிடிக்கும். அவருடன் இருக்க தான் ஆசைப்படுவேன். என பதிலளித்திருக்கிறார்.

இப்படியா இந்த பொண்ணு பதில் சொல்லும் என இவரை திட்டி தீர்த்து வருகின்றனர் மக்கள். இப்படி ஒரு பதிலளித்த யாஷிகாவை திட்டுபவர்கள், ஒரு நடிகை என்பதற்காக, இவ்வளவு கேவலமான கேள்வியை அவரிடம் அந்த பேட்டியில் கேட்டிருக்கிறார்களே.

முதலில் இது போன்ற கேள்வி கேட்பவர்களை கண்டியுங்கள், திட்டுங்கள் என ஒரு பக்கம் கொதித்து போயிருக்கின்றன சில பெண்ணிய அமைப்புகள்.