Asianet News TamilAsianet News Tamil

பொண்ணுங்கன்னா சும்மாவா...? ஆதாரத்துடன் சிக்கும் ஆர்யா...! களத்தில் இறங்கிய குடும்பத்தினர்...!

susaana father complaint for arya
susaana father complaint for arya
Author
First Published Apr 24, 2018, 1:41 PM IST


கடந்த சில மாதங்களுக்கு முன் துவங்கப்பட்ட பிரபல தனியார் தொலைக்காட்சி, பாலிவுட்டில் நடிகை ராக்கி சாவத் பங்கு பெற்று, திருமணம் செய்துக்கொண்ட நிகழ்ச்சியை போலவே தமிழிலும் ஆர்யாவை வைத்து 'எங்க வீட்டு மாப்பிள்ளை' என்று ஒரு நிகழ்ச்சியை  அறிமுகமாக்கியது. 

இந்த நிகழ்ச்சி பெண்களை அவமானப்படுத்துவது போல் அமைந்துள்ளது என கூறி பெண்கள் அமைப்பை சேர்ந்த பலர் தங்களுடைய கண்டனத்தை தெரிவித்தனர். ஆனால் இளைஞர்கள் மத்தியில் இந்த நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய வரவேற்பு இருந்ததால், தொடர்ந்து வெற்றிகரமாக நிகழ்ச்சி ஒளிபரப்பானது.  susaana father complaint for arya

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களின் ஒருவராக கலந்துகொண்டவர் இலங்கையை சேர்ந்த பெண் சுசானா. இவரை தான் ஆர்யா திருமணம் செய்துக்கொள்ளவர் என பலர் நினைத்தனர், ஆனால் அது நிறைவேறவில்லை. தற்போது இவருடைய குடும்பத்தினர்  மூலம் பிரச்சனை வெடித்துள்ளது.

சுசானாவின் தந்தை, இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பிய தொலைக்காட்சியின் மீதும், இந்த நிகழ்ச்சியின் மூலம் கிட்டதிட்ட 16 பெண்கள் மனதில் காதலை விதைத்து, 3 பெண்களை திருமண மேடை வரை கொண்டு வந்து ஏமாற்றிய ஆர்யா மீதும் போலீஸ் புகார் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. susaana father complaint for arya

மேலும் இந்த நிகழ்ச்சியின் மூலம் தான், துவங்கப்பட்ட சில மாதங்களிலேயே 5 வது இடத்தை இந்த தொலைக்காட்சி பிடித்துள்ளது என்கிற ஆதாரத்தையும் அவர் சமர்பித்துள்ளதாக கூறப்படுகிறது. 

மூன்று பெண்களை திருமணம் செய்துகொள்ள போவது போல் அவர்களுடைய வீட்டிற்கு சென்று, அவர்களுடன் டேட்டிங், ஹக்கிங், கிஸ்ஸிங் என ஜாலியாக இருந்துவிட்டு, தான் குழப்பமான மனநிலையில் உள்ளதாகவும் மூன்று பெண்களும் தனக்கு பொருத்தமானவர்கள். அதனால் ஒருவரை தேர்வு செய்து மற்ற இரண்டு பேரை காயப்படுத்த விரும்பவில்லை என கூறி நிகழ்ச்சிக்கு முற்று புள்ளி வைத்தார் ஆர்யா. susaana father complaint for arya

ஆர்யாவின் இந்த முடிவு ரசிகர்கள் மத்தியிலும், போட்டியாளர்கள் மற்றும் அவருடைய குடும்பத்தினர் மத்தியிலும் கடும் அதிருப்பித்தியை  ஏற்படுத்தியது. மேலும் தனக்கு சில நாட்கள் அவகாசம் வேண்டும் என கூறிய ஆர்யா தற்போது வரை இது குறித்து எந்த ஒரு பதிலையும் கூறவில்லை. 

இதனால், ஆர்யா மீது சுசானாவின் அப்பா புகார் கொடுத்திருப்பதாகவும், இதன் மூலம் இந்த நிகழ்சியாளர்கள் மற்றும் ஆர்யா கைது செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. சற்றும் இப்படி ஒரு நிலையை எதிர்பாராத ஆர்யாவிற்கு இதில் கலந்துக்கொண்ட போட்டியாளர்கள் மூலம் பிரச்சனை வந்துள்ளதால் என்ன செய்வது என புரியாமல் நண்பர்களிடம் புலம்பி வருகிறாராம் ஆர்யா. 

Follow Us:
Download App:
  • android
  • ios