கொரோனாவால் இப்படியொரு முடிவெடுத்த ரஜினிகாந்த்... வேறு வழியின்றி ‘அண்ணாத்த’ டீம் எடுத்த அதிரடி முடிவு...!
இந்நிலையில் அண்ணாத்த பட ஷூட்டிங் குறித்து சூப்பர் தகவல் கசிந்துள்ளது. அதாவது ஐதராபாத்திலேயே அண்ணாத்த பட ஷூட்டிங்கை மீண்டும் தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது.
'தர்பார்' படத்திற்கு பிறகு சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் ''அண்ணாத்த''. இதில் குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், சூரி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக மீனா நடிப்பதாகவும், வில்லியாக குஷ்புவும், வக்கீலாக நயன்தாராவும், தங்கையாக கீர்த்தி சுரேஷும் நடிப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. "அண்ணாத்த" என்ற தலைப்புக்கு ஏற்ற மாதிரி அண்ணன் - தங்கை சென்டிமெண்ட் செம்ம எவியாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இந்த படத்தில் முதல் இரண்டு கட்ட ஷூட்டிங் ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நிறைவடைந்துள்ளது. அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக கொல்கத்தா அல்லது புனே போகலாம் என படக்குழு திட்டமிட்டிருந்தனர். ஆனால் உலகம் முழுவதையும் உச்சகட்ட அச்சத்தில் வைத்துள்ள கொரோனா பீதி, இந்தியாவின் வடமாநிலங்களை விட்டுவைக்கவில்லை. அதனால் மூன்றாம் கட்ட ஷூட்டிங் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கலகலப்பாய் சிரிக்க வைக்க இத்தனை கெட்டப்புகளா?... வடிவேல் பாலாஜியின் அசத்தல் அவதாரங்கள் இதோ...!
கடந்த மார்ச் மாதம் முதலே படப்பிடிப்பிற்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மத்திய, மாநில அரசுகள் ஷீட்டிங்கை நடத்த அனுமதி கொடுத்துள்ளன. இதனால் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருந்த பல படங்கள் கேமராவை தூக்கிக்கொண்டு ஷூட்டிங்கிற்கு கிளம்பியாச்சு. டாப் ஸ்டார்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த, விஜய்யின் மாஸ்டர், அஜித்தின் வலிமை அப்டேட்டிற்காக ரசிகர்கள் காத்துக்கிடக்கின்றனர்.
இதையும் படிங்க: ஹீரோயின் வாய்ப்பிற்காக இப்படியா?... அடுத்தகட்டத்திற்கு காய் நகர்த்திய அனிகாவின் அதிரடி போட்டோஸ்...!
இந்நிலையில் அண்ணாத்த பட ஷூட்டிங் குறித்து சூப்பர் தகவல் கசிந்துள்ளது. அதாவது ஐதராபாத்திலேயே அண்ணாத்த பட ஷூட்டிங்கை மீண்டும் தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது. ஆனால் இந்த ஷூட்டிங்கில் ரஜினி பங்கேற்க போவதில்லையாம். ரஜினியை தவிர மற்ற குழுவினரை வைத்து படப்பிடிப்பை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. கொரோனாவின் தீவிரம் சற்றே குறைந்த பிறகு 2021 ஜனவரியில் ரஜினிகாந்த் நடிக்க வருவார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.