கோலிவுட் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்தியாவே வியந்து பார்க்கும் நடிகர்களில் ஒருவர். சினிமா உலகில் பல உச்சத்தை தொட்டவர் என்று சொன்னால் அது மிகையாகாது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இவருக்கு ஒரு கவலை உண்டு என்று சொன்னால் அது அவரது மகள் சௌந்தர்யாவின் வாழ்க்கையை பற்றி தான் இருக்கும், காரணம் திருமணம் செய்த சில வருடங்கலிலேயே இப்போது விவாகரத்து என நிற்கிறார்.

இவர்களுக்குள் கடந்த சில வருடங்களாக இருவருக்கும் ஒத்து போகவில்லையாம் , திடிரென்று ஏன் விவகாரத்து வரை சென்றது என்று விசாரித்தால், எல்லாம் சௌந்தர்யாவால் தானம், சௌந்தர்யா, அப்பா ரஜினிகாந்த் போல் இல்லை, முன்கோபம் மூக்குக்கு மேல் வருமாம்.

அவர் ஈரோஸ் அலுவலகத்தில் பணிபுரிந்த போதே அங்கு இருக்கும் பணியாளர்கள் அவரை பார்த்து நடுநடுங்கி போவார்களாம். எதற்கு எடுத்தாலும் கோபப்பட கூடியவர். அதிகம் கர்வமே அவரது வாழ்க்கைக்கு வினையானது, அஸ்வின் ரொம்ப அமைதியானவர் . 

புகுந்த வீட்டிலேயே தன்னுடைய கோபத்தை தலைக்கு மேல் காட்டினாராம் சௌந்தர்யா. எவ்வளவு பொறுத்து பார்த்த அஸ்வின், இது சரிப்பட்டு வராது என்று சௌந்தர்யாவை பிரிய முடிவு எடுத்தாராம்.

ஆனால் இருதரப்பு குடும்பமும் இரண்டு பேரிடமும் பேசி பார்த்தும் சரிப்பட்டு வரவில்லை அதனால் இவரது முன்கோபமே இவரது வாழ்க்கைக்கு வினை ஆனதாக கிசுகிசுக்க படுகிறது.