இப்படி மாட்டிக்கொண்டாரே கீர்த்தி சுரேஷ்...! வெளுத்து வாங்கிய ஸ்ரீரெட்டி!
பிரபல தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி அண்மைகாலமாக அதிக சர்ச்சைகளில் சிக்கியவர். தெலுங்கு பிரபலங்களில் துவங்கி, தமிழ் பிரபலங்கள் மற்றும் பிரபல விளையாட்டு வீரர் சச்சின் வரை யாரையும் விட்டு வைக்காமல் தொடர்ந்து வம்பிழுத்து கொண்டிருக்கிறார்.
பிரபல தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி அண்மைகாலமாக அதிக சர்ச்சைகளில் சிக்கியவர். தெலுங்கு பிரபலங்களில் துவங்கி, தமிழ் பிரபலங்கள் மற்றும் பிரபல விளையாட்டு வீரர் சச்சின் வரை யாரையும் விட்டு வைக்காமல் தொடர்ந்து வம்பிழுத்து கொண்டிருக்கிறார்.
தெலுங்கு திரையுலகில் தனக்கு நியாயம் கிடைக்கவில்லை என்று, தற்போது தமிழ் திரையுலகின் பக்கம் தன்னுடைய கவனத்தை திருப்பியுள்ளார் ஸ்ரீரெட்டி.
தற்போது 'ஸ்ரீரெட்டியின் டைரி' படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் இவர், புதிதாக சில படங்களில் நடிக்க பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில், விஷால் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள 'சண்டைகோழி' படத்தின் தெலுங்கு ப்ரோமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதில் கீர்த்தி சுரேஷ் உள்பட படக்குழுவினர் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ஒருவர், தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டியை வம்புக்கு இழுக்கும் வகையில், "ஸ்ரீரெட்டிக்கு வாய்ப்பு கொடுப்பது நல்லது தான்" ஆனால், இனி உஷாராக இருப்பார்கள். அவரை சுற்றி எல்லோரும் கேமரா வைத்துவிடுவார்கள் என கூறியுள்ளார்.
அப்போது பின்னால் இருந்து கீர்த்தி சுரேஷ் ஏளனமாக சிரித்ததாக சொல்லப்படுகிறது. இதனால் மிகவும் கோபமான ஸ்ரீ ரெட்டி, இந்த நிகழ்ச்சியில் கீர்த்தி சுரேஷ் விகாரமாக இருந்தார் என்றும்... கவலை படாதீங்க மேடம்... எப்போதும் உயர்ந்த இடத்தில் இருக்கமாட்டீர்கள் என பதில் கொடுத்துள்ளார்.
மேலும் ஒரு நாள் போராளியின் வலியை புரிந்துகொள்வீர்கள். நான் எப்போதும் உங்கள் சிரிப்பை மறக்கமாட்டேன். இப்போது நீங்கள் மேகத்தில் பறந்துகொண்டிருக்கிறீர்கள். என கூறி கீர்த்தியை வெளுத்து வாங்கியுள்ளார்.