சௌந்தர்யா ரஜினிகாந்த் இரண்டாவது திருமணம் குறித்து வெளியான புதிய தகவல்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யா... தற்போது தன்னுடைய இரண்டாவது திருமணத்திற்கு தயாராகி விட்டார். மேலும் இவருடைய திருமணம் குறித்து புதிய தகவல்கள் தொடர்ந்து வெளியாகிவருகிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யா... தற்போது தன்னுடைய இரண்டாவது திருமணத்திற்கு தயாராகி விட்டார். மேலும் இவருடைய திருமணம் குறித்து புதிய தகவல்கள் தொடர்ந்து வெளியாகிவருகிறது.
சௌந்தர்யா கோலிவுட் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் என்பதை தாண்டி இயக்குனராகவும் , தயாரிப்பாளராகவும் திரையுலகில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளவர். கடந்த 2010 ஆம் ஆண்டு தொழிலதிபர் அஸ்வின் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு வேத் என்கிற மகனும் உள்ளார்.
குழந்தை பிறந்ததற்கு இவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கணவர் அஸ்வினிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்து பெற்றோருடன் வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில் சௌந்தர்யா பிரபல தொழிலதிபர் வணங்காமுடியின் மகன், விசாகனை காதலித்து வந்ததாகவும்... இந்த காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரிய வர இவர்களுடைய காதல் திருமணத்தில் முடிய உள்ளதாக நேற்று தகவல் வெளியானது.
இதைத்தொடர்ந்து.. இவர்களுடைய திருமணம் வரும் ஜனவரி மாதல் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. விசாகன், வெளிநாட்டில், எம்.பி.ஏ., படிப்பை முடித்து, சென்னையில், மிகப் பெரிய மருந்து தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார். இவரும் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.