2வது கணவரோடு 2 வது காதலர் தினம் கொண்டாடிய ரஜினி மகள் சொந்தர்யா! மற்றொரு ஸ்பெஷல்... என்ன தெரியுமா?
சூப்பர் ஸ்டார் மகளும், இயக்குனருமான சௌந்தர்யா ரஜினிகாந்த் இந்த வருடம் தன்னுடைய முதல் வருட திருமண நாள் கொண்டாட்டத்தையும், இரண்டாவது ஆண்டு காதலர் தினத்தையும், கணவர் விசாகனுடன் சேர்ந்து, காதல் நகரமான பாரிஸில் கொண்டாடி மகிழ்ந்துள்ளார்.
சூப்பர் ஸ்டார் மகளும், இயக்குனருமான சௌந்தர்யா ரஜினிகாந்த் இந்த வருடம் தன்னுடைய முதல் வருட திருமண நாள் கொண்டாட்டத்தையும், இரண்டாவது ஆண்டு காதலர் தினத்தையும், கணவர் விசாகனுடன் சேர்ந்து, காதல் நகரமான பாரிஸில் கொண்டாடி மகிழ்ந்துள்ளார்.
இதனை ரசிகர்களுக்கு தெரிவிக்கும் விதமாக பாரிஸ் ஈபிள் டவர் முன்பு கணவருடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு தன்னுடைய மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டுள்ளார்.
கடந்த ஆண்டு பிப்ரவரி 11 ஆம் தேதி சௌந்தர்யா ரஜினிகாந்துக்கு, தொழிலதிபர் விசாகனுக்கும் சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றது. இவர்களுடைய திருமணத்தில் பல பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டு, மணமக்களை வாழ்த்தினர்.
மேலும் செய்திகள்: இருவர் நடுவில்... படுக்கையறை ரகசியத்தை பப்ளிக்கா போட்டுடைத்த மஹத் மனைவி பிராச்சி!
விசாகன், சௌந்தர்யாவின் மகன் வேத்தை தன்னுடைய மடியில் தூக்கி வைத்தபடி தாலி காட்டினார். மேலும் அவ்வபோது அப்பா - மகன் குறும்புத்தனமான விளையாட்டை புகைப்படம் எடுத்து ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார் சௌந்தர்யா.
கடந்த வருடம் திருமணம் முடிந்த கையேடு முதல் காதலர் தினத்தை கொண்டாடிய இந்த தம்பதி, தற்போது தங்களுடைய இரண்டாவது காதலர் தினத்தையும், முதல் கல்யாண நாளையும் பாரிஸில் கொண்டாடியுள்ளனர்.
மேலும் செய்திகள்: ஹோம்லி - ஸ்டைலிஷ் கலந்து கட்டி நடித்த மீரா ஜாஸ்மின்! பிறந்தநாள் ஸ்பெஷல் புகைப்படத்தொகுப்பு!
சௌந்தர்யா ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள புகைப்படம் இதோ...