Nayanthara : சிம்புவின் ரசிகர் ஒருவர் நயன் என் தலைவன் சிம்புவுக்கு தான் என்று கமெண்ட் செய்திருந்தார். 

தமிழ் சினிமாவில் நயன்தாரா மற்றும் சிம்பு காதல் தான் மிகவும் பிரபலமானது.அதுமட்டுமல்லாமல் இவர்களைப் பற்றிய வதந்தி பின்னும் இணையதளத்தில் வந்து கொண்டிருக்கிறது. இவர்கள் காதலிக்க ஆரம்பித்த காலகட்டத்தில் வல்லவன் திரைப்படத்தில் நடித்து வந்தார்கள்.அப்பொழுது இவர்கள் மிகவும் அன்னியமாக அதி ரொமண்டிக்வுடன் நடித்திருந்தார்கள். இதன் மூலமே அவர்கள் உண்மையாக காதலிக்கிறார்கள் என்று தெரியவந்தது. பிறகு இவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டார்கள்.சிம்பு பல பேட்டிகளில் கூட அவர் தான் என்னை விட்டுவிட்டு சென்றுவிட்டாள் என்று கூறி புலம்பி உள்ளார்.

இதனை தொடர்ந்து விக்னேஷ் சிவன் நம்ம ஆளு திரைப்படத்தின் ரிலீஸின் போது நயன்தாரா மற்றும் சிம்பு ஆகியவர்களின் கெமிஸ்ட்ரி சூப்பராக இருக்கும் எனவும் அதற்கு 100% மார்க் தரலாம் என்பதை குறிப்பிட்டு இணையதளத்தில் வெளியிட்டு இருந்தார். ஆனால் விக்னேஷ் சிவனுக்கு எதிர்காலத்தில் நயன்தாரா இவரை தான் காதலிக்க போகிறார் என்றே தெரியாமல் போய்விட்டது. 

இதற்கிடையே விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா நடிப்பில் வெளியான நானும் ரவுடி தான் படம் மிகப் பெரிய ஹிட்டானது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து விக்னேஷ் சிவன் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தை இயக்குகிறார்.

இப்படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோர் நடிக்கிறார்கள். இப்படத்தின் அப்டேட்களை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் இப்படத்தின் இறுதிகட்ட சூட்டிங் மைசூரில் நடக்கவிருக்கிறது என பதிவிட்டிருந்தார்.அந்தப் பதிவின் கீழே சிம்புவின் ரசிகர் ஒருவர் நயன் என் தலைவன் சிம்புவுக்கு தான் என்று கமெண்ட் செய்திருந்தார். ஆனால் இதனை விக்னேஷ் சிவன் கண்டுக்காத படி அமைதியாக இருந்துள்ளார்.