அந்த புகைப்படங்களில் தாயும் மகளும் ஒரே மாதிரியான உடை அணிந்து ஜோடியாக மிளிர்கின்றனர். 

தெலுங்கில் மிகப் பிரபலமாக இருந்த நடிகையான ஸ்ரேயா சரண் எனக்கு 20 உனக்கு 18 என்னும் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். இந்த படத்தை அடுத்து மழை படத்தில் சைலஜாவாக வந்து மனங்களை நனைய வைத்த ஸ்ரேயா சரண், ஜெயம் ரவியுடன் நடித்த இவர் மழை பாடலுக்கு ஆடிய நடனம் இன்று வரை பிரபலம். பாலிவுட் நாயகிகள் ரேஞ்சுக்கு தமிழிலும் இவர் காட்டிய கவர்ச்சி முன்னணி நாயகியாக இவரை மாற்றியது. 

View post on Instagram

மேலும் செய்திகளுக்கு...இரு மொழி சூப்பர் ஸ்டார்களுடன் நயன்தாரா.. வெளியானது காட் ஃபாதர் ரிலீஸ் டேட்

பின்னர் தனுஷின் திருவிளையாடல் ஆரம்பம், ரஜினியுடன் சிவாஜி, விஜயுடன் அழகிய தமிழ் மகன், விக்ரமுடன் கந்தசாமி, மீண்டும் தனுஷ் உடன் குட்டி, சரத்குமார் உடன் ஜக்குபாய், ஆரியா உடன் சிக்கு புக்கு, ரௌத்திரம், ராஜபாட்டை இறுதியாக சந்திரா ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் முன்னணிஅறியப்படும் இவர் 2013க்கு பிறகு பெரிதாக வாய்ப்பு எதையும் பெறவில்லை. பின்னர் 2018 ஆம் ஆண்டு உருசியாவை சேர்ந்த தொழிலதிபரும், டென்னிஸ் வீரருமான ஆன்ட்ரி கொஸ்சீவை ரகசிய திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ராதா என்ற பெண் குழந்தை உள்ளது. குழந்தையுடனான அழகிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார் நடிகை ஸ்ரேயா.

மேலும் செய்திகளுக்கு...முகப்பருவால் பறிபோன வாய்ப்பு..மனம் தளராமல் முயற்சி செய்யும் பாண்டியன் ஸ்டோர் நடிகை....அவரே சொன்ன குட் நியூஸ்

View post on Instagram

மேலும் செய்திகளுக்கு...ராஷ்மிகாவிடம் தகாத முறையில் நடந்து கொண்ட ரசிகர்கள்...பதறிப்போன வாரிசு பட நாயகி..

தற்போது தனது 1 வயது மகள் ராதாவுடன் ஐரோப்பாவிற்கு சுற்றுலா சென்றுள்ள இந்த தம்பதிகள் அங்குள்ள சில புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பபகிர்ந்துள்ளனர்.. அந்த புகைப்படங்களில் தாயும் மகளும் ஒரே மாதிரியான உடை அணிந்து ஜோடியாக மிளிர்கின்றனர். 

View post on Instagram