பிரபல மாஸ் ஹீரோ கொரோனாவால் பாதிப்பு! செம்ம ஷாக்கில் ரசிகர்கள்!
கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை, மத்திய மற்றும் மாநில அரசுகள் எடுத்து வந்தாலும், கொரோனாவின் இரண்டாவது அலையால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை கூடிக்கொண்டே செல்கிறது. அந்த வகையில் பிரபல மாஸ் ஹீரோ தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை, மத்திய மற்றும் மாநில அரசுகள் எடுத்து வந்தாலும், கொரோனாவின் இரண்டாவது அலையால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை கூடிக்கொண்டே செல்கிறது. அந்த வகையில் பிரபல மாஸ் ஹீரோ தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி போடும் போடும் பணி ஒருபுறம் தீவிரமாக நடந்து வந்தாலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கையும் அதிகமாகி கொண்டே போகிறது. கொரோனாவின் முதல் அலையை விட, இரண்டாவது அலையின் தீவிரம் அதிகமாக உள்ளதை கருத்தில் கொண்டு தற்போது தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பிரபலங்கள், பொதுமக்கள், அரசியல் வாதிகள் , குழந்தைகள் என, கொரோனா தொற்றால் பலர் அடுத்தடுத்து பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
அந்த வகையில் தற்போது... தெலுங்கு திரையுலகின் பிரபல மாஸ் நடிகராக வலம் வரும், ஜூனியர் என்.டி.ஆர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமையில் உள்ளதாக ட்விட்டர் மூலம் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள பதிவில்.. "நான் கோவிட் 19 பரிசோதனை மேற்கொண்ட போது தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தன்னுடைய ரசிகர்கள் யாரும் கவலைப்பட வேண்டாம், நான் நலமாக இருக்கிறேன். என் குடும்பத்தினரிடம் இருந்து தனிமை படுத்தப்பட்டுள்ளேன். மேலும் மருத்துவர்களின் அறிவுறுத்தியுள்ள அனைத்து நெறிமுறைகளையும் பின் பற்றி வருகிறேன். அதே போல் கடந்த சில தினங்களாக தன்னிடம் நேரடியாக தொடர்பு கொண்டவர்கள் பரிசோதனை செய்து கொள்ளுங்கள் எனவும், அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என்றும் தெரிவித்துள்ளார் ".
தற்போது ஜூனியர் என்.டி.ஆர், பாகுபலி பட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில், பான் இந்தியா படமாக உருவாகி வரும், 'RRR ' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில், ராம் சரண் தேஜாவுடன் இணைந்து நடித்து வருகிறார். கொரோனாவின் முதல் அலையில் இயக்குனர் ராஜமௌலி மற்றும் ராம் சரண் தேஜா ஆகியோர் பாதிக்கப்பட்டு அதில் இருந்து மீண்ட நிலையில், கொரோனாவின் இரண்டாவது அலையில் டோலிவுட் திரையுலகின் மாஸ் ஹீரோ பாதிக்கப்பட்டுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.