Asianet News TamilAsianet News Tamil

பிரபல டிவி நடிகை தூக்கிட்டு தற்கொலை..!! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

கன்னட டிவி நடிகை சௌஜன்யா (Soujanya ) என்பவர் திடீர் என கடிதம் எழுதி வைத்து விட்டு, தன்னுடைய வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Shocking Famous kannada TV actress Soujanya commits suicide
Author
Chennai, First Published Sep 30, 2021, 2:46 PM IST

கன்னட டிவி நடிகை சௌஜன்யா (Soujanya ) என்பவர் திடீர் என கடிதம் எழுதி வைத்து விட்டு, தன்னுடைய வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னட தொலைக்காட்சி நடிகை சவுஜன்யா, பெங்களூரின் தெற்கு மாவட்டத்தில் உள்ள பெரியபெல்லே என்ற கிராமத்தில் உள்ள கும்பலகோடு பகுதியில் உள்ள தன்னுடைய வீட்டில், யாரும் இல்லாத சமயத்தில் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

மேலும் செய்திகள்: அதிரடி சரவெடி... வேற லெவெலுக்கு செம்ம மாஸாக உருவாக போகும் 'தல 61'..! போனி கபூர் கூறிய தகவல்..!

 

Shocking Famous kannada TV actress Soujanya commits suicide

சௌஜன்யா, குடகு மாவட்டத்தின் குஷாலநகரைச் சேர்த்தவர், வளர்ந்து வரும் நடிகையான இவர் டிவி தொடர்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகியுள்ளார். சீரியலை தாண்டி சில படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் இவர் திடீர் என தன்னுடைய தாய் தந்தைக்கு கடிதம் எழுதி வைத்து விட்டு, தற்கொலை செய்து கொண்டுள்ளது பேரதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்: ரசிகர் கேட்ட கேள்விக்கு சமந்தாவின் பளீச் பதில்..!! ஒரு வழியாக முடிவுக்கு வந்த வதந்தி..!!

 

Shocking Famous kannada TV actress Soujanya commits suicide

தன்னுடைய இறப்பு குறித்து சௌஜன்யா எழுதி வைத்துள்ள கடிதத்தில்  என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை. என் சாவுக்கு நானே பொறுப்பு. அப்பா-அம்மா என்னை மன்னித்து விடுங்கள். தன்னுடைய தந்தையை நன்றாக பார்த்துக்கொள்ளும்படி கூறியுள்ளார். தான் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அதோடு தன்னால் வாழ முடியாது என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக தன்னுடைய கடிதத்தில் உருக்கமாக தெரிவித்துள்ளார்.  இந்த சம்பவம் தற்போது கன்னட திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios