ஏன் இப்படி? 50 வயதில் அமீர் கான் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் ரசிகர்கள்!
பாலிவுட் முன்னணி நடிகர் அமீர் கான், சமூக வலைத்தளத்தில் விட்டு நிரந்தரமாக விலகுவதாக அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
பாலிவுட் முன்னணி நடிகர் அமீர் கான், சமூக வலைத்தளத்தில் விட்டு நிரந்தரமாக விலகுவதாக அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
மேலும் செய்திகள்: ஆஸ்கர் விருது பட்டியலில் இருந்து வெளியேறிய 'சூரரை போற்று'..! நாமினேட் செய்யப்பட்ட திரைப்படங்கள் அறிவிப்பு!
பாலிவுட் திரையுலகில் முன்னணி ஸ்டார் ஹீரோக்களில் ஒருவரான அமீர் கான், தன்னுடைய கதாபாத்திரத்திற்காக ரிஸ்க் எடுத்து நடிப்பவர். அந்தவகையில் இவர் நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான, 'தங்கள்' படத்திற்காக உடல் எடையை ஏற்றியும், இறக்கியும், மிரட்டி இருந்தார்.
தற்போது வரை இந்த படத்தின் தாக்கம் அனைத்து தரப்பு ரசிகர்களின் மனதிலும் உள்ளது. மேலும் இவருக்கு பாலிவுட் திரையுலகம் மட்டுமின்றி, கோலிவுட், டோலிவுட், என அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. இந்நிலையில் மார்ச் 14-ஆம் தேதி தன்னுடைய 50 ஆவது பிறந்தநாளை கொண்டாடிய அமீர்கானுக்கு, அனைத்து திரையுலகத்தைச் சேர்ந்த ரசிகர்களும் பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.
மேலும் செய்திகள்: பளபளக்கும் கன்னங்கள்... பால் வண்ண மேனியை மிடுக்காக காட்டி ரசிகர்களை உருக வைத்த வாணி போஜன்!
அனைவருடைய வாழ்த்துகளுக்கும் நன்றி தெரிவித்த அமீர்கான், இனி சமூக வலைத்தளத்தில் இருந்து நிரந்தரமாக விலகுவதாக அறிவித்துள்ளார். இதுதான் தன்னுடைய கடைசி பதிவு என அவர் தெரிவித்திருந்த நிலையில் இது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.