கந்து வட்டி விவகாரம்: சீரியல் நடிகை ஜெயலட்சுமி கொடுத்த பரபரப்பு விளக்கம்!!
கடந்த இரண்டு நாட்களுக்கு முன், மகளிர் சுய உதவி குழுவை சேர்ந்த, கீதா என்கிற பெண், தங்களுக்கு சுய உதவி குழு மூலம் பணம் தருவதாக கூறிய, பிரபல கட்சியை சேர்ந்தவரும், நடிகையுமான ஜெயலட்சுமி தற்போது அதிக வட்டி கேட்பதாக காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்தார்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன், மகளிர் சுய உதவி குழுவை சேர்ந்த, கீதா என்கிற பெண், தங்களுக்கு சுய உதவி குழு மூலம் பணம் தருவதாக கூறிய, பிரபல கட்சியை சேர்ந்தவரும், நடிகையுமான ஜெயலட்சுமி தற்போது அதிக வட்டி கேட்பதாக காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்தார்.
தற்போது இதுகுறித்து காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இது குறித்து நடிகை ஜெயலட்சுமி தன்னுடைய தரப்பு நியாயத்தை கூறியுள்ளார்.
நடிகை ஜெயலட்சுமி சென்னை கமிஷனர் அலுவலகத்தில், கீதா என்கிற பெண் கொடுத்துள்ள புகார் குறித்து கொடுத்துள்ள விளக்கத்தில், கீதா என்பவரை தனக்கு 2019ஆம் ஆண்டு அறிமுகமானதாகவும், ஊரடங்கு காரணமாக தன்னுடைய சுய உதவி குழுவில் உள்ள பெண்கள் மிகவும் கஷ்டப்படுவதாகவும், குழந்தைகளின் கல்வி கட்டணத்தை செலுத்த முடியாத நிலை உள்ளதாக கூறினார்.
எனவே கஷ்டப்படுபவர்களுக்கு உதவ வேண்டும் என்கிற நோக்கத்தில் மட்டுமே, கீதாவின் குழுவில் இருந்த பெண்களுக்கு 17.50 லட்ச ரூபாய் கடனாக கொடுத்தேன். இந்த பணத்தை 6 மாதத்திற்குள் திருப்பி கொடுத்தால் வட்டி தேவையில்லை என்று கூறினேன். ஆனால் நான் கொடுத்த பணத்தை கீதா குழுவில் உள்ள மற்ற பெண்களுக்கு கொடுக்காமல் மோசடி செய்துள்ளார். இப்போது பணத்தை திருப்பி கேட்டால் மிரட்டுகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறியுள்ளார்.
ஆனால் கீதாவோ, நடிகை ஜெயலட்சுமி கந்து வட்டிக்கு பணம் கொடுத்து தங்களை ஆட்களை வைத்து மிரட்டுவதாக கூறியுள்ளார். யார் சொல்வது உண்மை என்பதை தெரிந்து கொள்ள போலீசார் இரு தரப்பு மனுக்களையும் பெற்று கொண்டு தற்போது தொடர்ந்து விசாரணை செய்து வருகிறார்கள். போலிசாரின் விசாரணைக்கு பின்னரே யார் சொல்வது உண்மை என்பது தெரியவரும்.