Asianet News TamilAsianet News Tamil

ஹவுஸ்மேட்ஸ் செய்த செயல்... நியாயமே இல்லையா? கலங்கி அழுத சம்யுக்தா..!

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் முடிவுக்கு வர உள்ள நிலையில் அடுத்த கேப்டன் யார் என்பதை போட்டியாளர்கள் தேர்வு செய்து, அவர்களுக்கு இடையே போட்டியோ, அல்லது அணைத்து போட்டியாளர்களும் நேரடியாகவோ கேப்டனை தேர்வு செய்யும் முறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
 

samyuktha crying for biggboss house
Author
Chennai, First Published Nov 6, 2020, 1:30 PM IST

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் முடிவுக்கு வர உள்ள நிலையில் அடுத்த கேப்டன் யார் என்பதை போட்டியாளர்கள் தேர்வு செய்து, அவர்களுக்கு இடையே போட்டியோ, அல்லது அணைத்து போட்டியாளர்களும் நேரடியாகவோ கேப்டனை தேர்வு செய்யும் முறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து ஏற்கனவே இன்றைய முதல் புரோமோவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. கோர்ட் சீனில்... ஆரி ஒவ்வொருவருடைய குற்றங்களையும் எடுத்து கூறியதால், மற்ற போட்டியாளர்களும் இவர் சிறந்த தலைமை என்று, நினைத்து அவரை பலர் தலைவர் போட்டிக்கு நாமினேட் செய்வதை பார்க்க முடிந்தது.

samyuktha crying for biggboss house

இதை தொடர்ந்து தற்போது வெளியாகியுள்ள புரோமோவில், ஆரி அந்த கோர்ட் ரூம்பில் கத்தியதை யாருமே தப்பு என கூறவில்லை என்றும், எல்லோரும் அவர் சூப்பராக பேசியதாக கை தூக்கியதாக , தனக்கு ஆதரவு தெரிவித்த போட்டியாளர்களிடம் தெரிவிக்கிறார் சம்யுக்தா.

samyuktha crying for biggboss house

பின்னர் தன்னை ஹவுஸ்மேட்ஸ் இன்சல்ட் செய்ததாக ஆஜித்திடம் கூறி கலங்கி அழுகிறார். கொஞ்சம் கூட அவர்களும் எது நியாயம் என தெரியவில்லையா என கேட்பதும் இரண்டாவது புரோமோவில் வெளியாகியுள்ளது.

இரண்டாவது புரோமோ இதோ...

Follow Us:
Download App:
  • android
  • ios