Asianet News TamilAsianet News Tamil

samantha: விவாகரத்துக்கு பின்னும் விட்றதா இல்ல.... நாகசைதன்யாவை கடுப்பேற்ற போல்டான அறிவிப்பை வெளியிட்ட சமந்தா

நடிகர் நாகசைதன்யா, தன்னை கவர்ச்சியாக நடிக்ககூடாது எனக் கூறியதால், நீயும் வேணாம் உன் உறவும் வேணாம்னு தூக்கி எறிந்த சமந்தா, தற்போது அவரை மேலும் கடுப்பேற்றும் விதமாக புதிதாக வெளிநாட்டுப் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

samanth silently take revenge on nagachaitanya
Author
Tamil Nadu, First Published Nov 26, 2021, 3:11 PM IST

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. இவர் கடந்த 2017-ம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை காதல் திருமணம் செய்து கொண்டார். நான்கு ஆண்டுகள் மட்டுமே நீடித்த இவர்களது காதல் வாழ்க்கை, இந்த ஆண்டு முடிவுக்கு வந்தது. கருத்து வேற்பாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

samanth silently take revenge on nagachaitanya

கடந்தாண்டு ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் வெளியான ‘தி பேமிலி மேன் 2’ வெப் தொடரில் நடிகை சமந்தா சர்ச்சைக்குரிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதில் அவர் நெருக்கமான படுக்கையறை காட்சியில் நடித்தது தான் விவாகரத்துக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இது நாகசைதன்யாவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் சுத்தமாக பிடிக்காததால் தான் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

samanth silently take revenge on nagachaitanya

விவாகரத்துக்கு பின் நடிகை சமந்தாவின் ஆக்டிங் கெரியர் மின்னல் வேகத்தில் வளர்ச்சி கண்டுள்ளது. தற்போது விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து முடித்துள்ள சமந்தா, கதாநாயகிக்கு முக்கியத்துவமுள்ள மேலும் இரண்டு படங்களிலும் கமிட் ஆகி உள்ளார். 

இதுதவிர அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் புஷ்பா என்கிற பிரம்மாண்ட பட்ஜெட் படத்தில், ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆட ஒப்பந்தமாகி உள்ளார். இதற்காக அவருக்கு கோடிக்கணக்கில் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது.

samanth silently take revenge on nagachaitanya

நடிகர் நாகசைதன்யா, தன்னை கவர்ச்சியாக நடிக்ககூடாது எனக் கூறியதால், நீயும் வேணாம் உன் உறவும் வேணாம்னு தூக்கி எறிந்த சமந்தா, தற்போது அவரை மேலும் கடுப்பேற்றும் விதமாக புதிதாக வெளிநாட்டுப் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். 

அதன்படி ‘அரேஞ்ச்மெண்ட்ஸ் ஆஃப் லவ்' என்கிற படத்தில் கமிட் ஆகியுள்ளார் சமந்தா, இந்தப் படம், இந்திய எழுத்தாளர் டைமெரி என்.முராரி எழுதிய நாவலை தழுவி எடுக்கப்பட உள்ளது. இதில் நடிகை சமந்தா ஒரு துப்பறியும் நிறுவனத்தை நடத்தும், இருபால் தமிழ் பெண்ணாக மிகவும் துணிச்சலான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். 

samanth silently take revenge on nagachaitanya

இந்த படத்தில் போல்டான காட்சிகளும் இருக்கும் என சொல்லப்படுகிறது. நாக சைதன்யாவுக்கு பதிலடி கொடுக்கவே சமந்தா இத்தகைய கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்துள்ளதாக அரசல் புரசலாக பேசப்படுகிறது. இந்த வெளிநாட்டு படத்தின் படப்பிடிப்பு அடுத்தாண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்க உள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios