Asianet News TamilAsianet News Tamil

மிக கடுமையான கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும்... விஷால் விவகாரம் குறித்து ஆர்.பி. சௌத்ரி எச்சரிக்கை!

கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரபல தயாரிப்பாளர் ஆர்பி சௌத்ரி இடம் பெற்ற கடனை திருப்பி கொடுத்த பிறகும் அவரிடம், நான் எழுதி கொடுத்த உறுதிமொழி பாத்திரத்தை திருப்பி கொடுக்கவில்லை என  நடிகர் விஷால் காவல்துறையில் புகார் அளித்துள்ள நிலையில் இந்த புகார் குறித்து தற்போது ஆர்பி சவுத்ரி விளக்கமளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 
 

rb choudary statement for vishal issue
Author
Chennai, First Published Jun 18, 2021, 3:11 PM IST

கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரபல தயாரிப்பாளர் ஆர்பி சௌத்ரி இடம் பெற்ற கடனை திருப்பி கொடுத்த பிறகும் அவரிடம், நான் எழுதி கொடுத்த உறுதிமொழி பாத்திரத்தை திருப்பி கொடுக்கவில்லை என  நடிகர் விஷால் காவல்துறையில் புகார் அளித்துள்ள நிலையில் இந்த புகார் குறித்து தற்போது ஆர்பி சவுத்ரி விளக்கமளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:

rb choudary statement for vishal issue

மூன்று வருடங்களுக்கு முன்பு நடிகர்‌ திரு.விஷால்‌ “இரும்புத்திரை: படம்‌ தயாரிக்க என்னிடம்‌ பைனான்ஸ்‌ வாங்கியிருந்தார்‌. அந்த படத்திற்கு நானும்‌ விநியோகஸ்தர்‌ திரு.திருப்பூர்‌ சுப்பிரமணியும்‌ சேர்ந்து பணம்‌ கொடுத்தோம்‌. "இரும்புத்திரை: படம்‌ வெளியீட்டில்‌ திரு.விஷால்‌ எனக்கு கொடுக்கவேண்டிய பணத்தில்‌ பாதி தொகையை கொடுத்துவிட்டு மீதி தொகையை சில தவணைகளில்‌ கொடுப்பதாக கூறினார். நானும்‌ ஒரு தயாரிப்பாளர்‌ என்ற முறையில்‌ படம்‌ வெளியாக வேண்டுமென்று ஒப்புக்கொண்டு கிளியரன்ஸ் கொடுத்தேன்‌. இறுதியாக இருந்த பாக்கி தொகையை அவர்‌ தயாரித்து நடிக்கும்‌ “சக்ரா திரைப்படத்தின்‌ வெளியீட்டில்‌ தருவதாக கூறியிருந்தார்‌. ”சக்ரா படத்தின்‌ வெளியீட்டின்‌ பொழுது எனக்கு தர வேண்டிய பணத்தை திரு.திருப்பூர்‌ சுப்பிரமணியம்‌ அவர்கள்‌ சக்ரா படத்தின்‌ கோவை ஏரியா விநியோக உரிமையை பெற்றுள்ளதாகவும்‌ அதில்‌ வரும்‌ ஓவர்ப்ளோ பணத்தின்‌ மூலம்‌ எனக்கு வரவேண்டிய தொகையை கொடுத்துவிடுவதாக கூறினார்‌. நானும்‌ அதற்கு ஒப்புக்கொண்டேன்‌. அதன்‌ அடிப்படையில்‌ நானும்‌ திரு.விஷாலும்‌ 20-02 -2021 அன்று திரு.விஷாலின்‌ வழக்கறிஞர்‌ மூலமாக இரும்புத்திரை” “சக்ரா ஆகிய இரு திரைப்படங்களுக்கு மட்டுமான வரவு செலவு கணக்கு முடிந்து விட்டதாக ஓர்‌ ஒப்பந்தம்‌ செய்துகொண்டோம்‌. இரும்புத்திரை பைனான்ஸ்க்காக நெகட்டிவ் எனது நிறுவனத்தின்‌ பெயரிலும்‌ அத்துடன்‌ சில உறுதிமொழி பத்திரங்களையும்‌ கொடுத்திருந்தார்‌. எனது நிறுவனத்தின்‌ பெயரில்‌ இருந்த காரணத்தால்‌ திரு.திருப்பூர்‌ சுப்பிரமணியம்‌ பணத்திற்காக திரு.விஷால்‌ கொடுத்த பத்திரங்களை எங்கள்‌ இருவருக்கும்‌ பொதுவான ரெட்டை ஜடை வயசு ஆயுதபூஜை, படத்தின்‌ இயக்குனர்‌ திரு.சிவக்குமார்‌ அவர்களிடம்‌ கொடுத்து வைத்திருந்தேன்‌.

rb choudary statement for vishal issue

இந்த நிலையில்‌ திடிரென திரு.சிவக்குமார்‌ அவர்கள்‌ மாரடைப்பால்‌ மரணம்‌ அடைந்துவிட்டார்‌. அவர்‌ திருமணமாகாதவர்‌ என்பதால்‌ தனி நபராக அடுக்குமாடி குடியிருப்பில்‌ வாழ்ந்து வந்தார்‌. ஆகவே அவர்‌ இறந்தது, இரண்டு நாட்களுக்கு பின்புதான்‌ மற்றவர்களுக்கே தெரியவந்தது. அதன்பின்‌ அந்த பத்திரங்களை எங்கு வைத்தார்‌ என்று தெரியவில்லை, எப்படியும்‌ கிடைத்துவிடும்‌ என்ற நம்பிக்கையில்‌ அவருக்கு தெரிந்த நபர்களிடம்‌ விசாரித்தும்‌ இன்றுவரை கிடைக்கவில்லை. அதன்பின்‌ கொரோனா காலம்‌ தொடங்கிவிட்டது, இந்நேரத்தில்‌ எனக்கும்‌ திரு.விஷாலுக்கும்‌ இடையில்‌ பணம்‌ வாங்கி, கொடுக்கும்‌ திரு.லக்ஷ்மன்‌ என்பவர்‌ மூலம்‌ அந்த பத்திரம்‌ கிடைக்காமல்‌ போன விஷயத்தை திரு விஷாலுக்கு தெரிவிக்குமாறு கூறினேன்‌. இந்த நிலையில்‌ திரு.விஷால்‌ கடந்த 07-05-2021ல்‌ காவல்துறையில்‌ என்னிடம்‌ கொடுத்த உறுதிமொழி பத்திரங்கள்‌ திரும்ப கிடைக்கவில்லை. என்றும்‌, அதை வேறு யாரிடமும்‌ இருக்கிறதா என்பதை கண்டுபிடித்து தாருங்கள்‌ என்றும்‌ புகார்‌ ஒன்றை கொடுத்துள்ளார்‌. 

rb choudary statement for vishal issue

அவர்‌ கொடுத்த புகார்‌ மிகவும்‌ சரியானதென்றே நானும்‌ கருதுகிறேன்‌, ஏனெனில்‌ வேறு யாரின்‌ கையில்‌ இருக்குமோ என்ற பயத்தில்‌ அதை கொடுத்துள்ளார்‌. ஆனால்‌ அவர்‌ என்னிடமும்‌ கலந்து பேசி நாங்கள்‌ இருவரும்‌. சேர்ந்து புகார்‌ அளித்திருந்தால்‌ தெளிவாக இருந்திருக்கும்‌. ஏனெனில்‌ 2020 ஜனவரியில்‌ அவர்‌ தயாரித்து இயக்கும்‌ துப்பறிவாளன்‌-2 திரைப்படத்தின்‌ சாட்டிலைட் டிஜிட்டல் உரிமையின்‌ மீது என்னிடம்‌ பைனான்ஸ்‌ வாங்கியுள்ளார்‌ இந்த பைனான்ஸ்‌ வாங்கிய தேதியில்‌ இருந்து இன்றுவரை வட்டியும்‌ அசலும்‌ நிலுவையில்‌ உள்ளன.

இந்த நிலையில்‌ இரும்புத்திரை படத்தின்‌ உறுதிமொழி பத்திரங்களை வைத்து நான்‌ மோசடி செய்ய முயற்சிப்பதாக திரு.விஷால்‌ புகார்‌ செய்துள்ளார்‌ என்ற செய்திகள்‌ ஊடகங்களில்‌ மூலம்‌ வெளிவந்து கொண்டிருக்கின்றன, இந்த செய்திகள்‌ எனக்கு மிகுந்த மன வேதனை அளிக்கின்றன. நான்கு. மொழிகள்‌, 92 திரைப்படங்கள்‌, 40 ஆண்டுகால சினிமா வாழ்க்கையில்‌ இப்படி ஒரு அவதூர்‌ புகாரை நான்‌ சந்திப்பது இதுவே முதல்‌ முறையாகும்‌. இதுவரை என்னுடைய பணம்‌ பிறரிடம்‌ பாக்கி வரவேண்டியதே தவிர மற்ற எவருடைய பணமும்‌ என்னிடம்‌ இல்லை என்பது தென்னிந்திய திரை உலகத்திற்கே தெரியும்‌, என்னுடைய இந்த அறிக்கையின்‌ தாமதத்திற்கு காரணம்‌ இந்த சம்பவம்‌ நடக்கும்‌ சமயத்தில்‌ நான்‌ வெளியூரில்‌ இருந்த காரணத்தினால்‌ சென்னைக்கு திரும்பிய பிறகு என்னுடைய தன்னிலை விளக்கத்தை தங்களுடன்‌ பகிர்ந்துகொள்கிறேன்‌.

rb choudary statement for vishal issue

மேலும் ஒரு அறிவிப்பு: திரு சிவகுமார் அவர்களிடம் இருந்த உறுதிமொழி பாத்திரங்கள் அவரைச் சார்ந்த நபர்கள் இடமோ அல்லது வேறு யாரிடமும் இருந்தால் அதை என்னிடமோ, விஷாலிடமோ அல்லது காவல்துறையிடமோ ஒப்படைக்கவும். மீறி அதை வைத்து இருப்பவர்களோ அல்லது பயன்படுத்த முயற்சி செய்வதோ தெரியவந்தால் அவர்கள் மீது மிக கடுமையான கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை ஊடகங்கள் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு ஆர்பி சௌத்ரி பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios