Asianet News TamilAsianet News Tamil

தீராத துயரத்துடன் நண்பருக்கு அஞ்சலி செலுத்திய - ரஜினிகாந்த்.....!!!

rajinikanth tribute-for-cho
Author
First Published Dec 7, 2016, 11:01 AM IST


தமிழகத்திற்கு இந்த ஆண்டு  யாராலும் மறக்க முடியாத துயர ஆண்டாக மாறியுள்ளது. நேற்று முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தமிழ்நாட்டில் உள்ள அனைவரையும் துக்கத்தில் ஆழ்த்தியது.

இதை தொடர்ந்து இன்று தலைசிறந்த மூத்த பத்திரிக்கையாளர், நடிகர், வழக்கறிஞர் என பல தோற்றம் கொண்ட சோ காலமானார்  என்ற செய்தி பலரையும் மேலும்  அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

சோ ரஜினியின் நெருங்கிய நண்பர் என்பது பலரும் அறிந்தது தான், கபாலி படத்தை அவருக்காக சிறப்பு காட்சி ரிலீஸ் செய்து அவருடைய கருத்துக்களை கேட்டறிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த துக்க செய்தியை அறிந்த ரஜினி முதல் ஆளாக வந்து தன் அஞ்சலியை செலுத்தினார், இது மட்டுமின்றி பிரபல இயக்குனர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலர் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios