Asianet News TamilAsianet News Tamil

”எனக்குள் இருக்கும் இன்னொரு ரஜினியை அடையாளம் காட்டியவர் மகேந்திரன்’...நெகிழும் சூப்பர் ஸ்டார்...

”எனக்குள் இருக்கும் இன்னொரு ரஜினியை அடையாளம் காட்டியவர் இயக்குநர் மகேந்திரன் தான். என் வாழ்நாள் உள்ளவரை அவரை நான் நன்றியுடன் நினைவுகூர்வேன்” என்று கண்களில் நீர்கோர்க்கப் பேசினார் ரஜினி.

rajini speaks about director mahendran
Author
Chennai, First Published Apr 2, 2019, 12:58 PM IST

”எனக்குள் இருக்கும் இன்னொரு ரஜினியை அடையாளம் காட்டியவர் இயக்குநர் மகேந்திரன் தான். என் வாழ்நாள் உள்ளவரை அவரை நான் நன்றியுடன் நினைவுகூர்வேன்” என்று கண்களில் நீர்கோர்க்கப் பேசினார் ரஜினி.rajini speaks about director mahendran

தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற இயக்குனரான மகேந்திரன் (79) சிறுநீரக கோளாறுக்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகப் பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மகேந்திரனின் உடல் பள்ளிக்கரனை அருகே உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. காலை முதலே சினிமா பிரபலங்கள் ஒருவர் பின் ஒருவராக வந்து மகேந்திரன் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் நடிகரும், மகேந்திரனின் நண்பருமான நடிகர் ரஜினிகாந்த் மகேந்திரன் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். பின்னர் மகேந்திரனின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார். rajini speaks about director mahendran

பின்னர் பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர்,”இயக்குநர் மகேந்திரனுடன் எனக்கு சினிமாவை தாண்டிய நட்பு உள்ளது.  ‘முள்ளும் மலரும்’, ’ஜானி’ படங்கள் மூலம் எனக்குள் இன்னொரு ரஜினி இருப்பதை காட்டியவர் மகேந்திரன் தான். எதற்காகவும் சுயமரியாதையை விட்டுக் கொடுக்காதவர், தமிழ் சினிமா உள்ளவரை இயக்குநர் மகேந்திரனுக்கென்று தனி இடம் இருக்கும். என் வாழ்நாள் உள்ளவரை அவரை நான் நன்றியுடன் நினைவுகூர்வேன்” என்று கண்களில் நீர்கோர்க்கப் பேசினார் ரஜினி.

மொத்தம் 12 படங்களை மட்டுமே இயக்கியுள்ள மகேந்திரன் ரஜினியை வைத்து மட்டுமே ‘முள்ளும் மலரும்’,’ஜானி’,’கை கொடுக்கும் கை’ ஆகிய மூன்று படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios