Asianet News TamilAsianet News Tamil

கஜா நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம் மதிப்புள்ள பொருட்களை வழங்குகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதியாக ரூ. ஐம்பது லட்சத்தை அறிவித்த சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த், இதற்கு மேலும் தேவைப்படும் உதவிகளை தனது ரசிகர் மன்றத்தினர் தொடர்ந்து செய்வார்கள் என்றும் அறிவித்தார். இந்த 50 லட்சம் பணமாக அல்லாமல் பொருட்களாக லாரிகளில் கொண்டு செல்லப்படுகிறது.

rajini contributes 50 lakhs to gaja relief
Author
Tanjore, First Published Nov 20, 2018, 3:19 PM IST

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதியாக ரூ. ஐம்பது லட்சத்தை அறிவித்த சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த், இதற்கு மேலும் தேவைப்படும் உதவிகளை தனது ரசிகர் மன்றத்தினர் தொடர்ந்து செய்வார்கள் என்றும் அறிவித்தார். இந்த 50 லட்சம் பணமாக அல்லாமல் பொருட்களாக லாரிகளில் கொண்டு செல்லப்படுகிறது.rajini contributes 50 lakhs to gaja relief

நடிகர் சூர்யா குடும்பத்தினர் முதல் உதவியாக புயல் நிவாரணத்துக்கு ரூ. 50 லட்சம் அறிவிக்கத் துவங்கியதும், அடுத்த சில மணி நேரங்களிலேயே விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் ஆகியோரும் தங்கள் தரப்பு உதவிகளை அறிவித்தனர். 

நடிகர் விஜய் தனது ரசிகர் மன்றத்தினருக்கு கொஞ்சம் கொஞ்சமாக அனுப்பி உதவி வருவதாகக் குழப்பமான செய்திகள் நிலவுகின்றன. அஜீத் தனது குடும்பத்தினருடன் கோவா சென்றிருப்பதால் நாளை சென்னை திரும்பியதும்  ஒரு மிகப்பெரிய தொகையை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.rajini contributes 50 lakhs to gaja relief

இந்நிலையில் சற்றுமுன்னர் தனது நிவாரண உதவித்தொகையாக ரூ.50 லட்சத்துக்கான பொருட்கள் மதிப்புள்ள பொருட்களை வழங்குவதாக  அறிவித்ததுடன் தனது ரசிகர் மன்றத்தினர் முழு மூச்சுடன் நிவாரணப் பணிகளுக்கு உதவுவார்கள் என்றும் அறிவித்தார். கவிப்பேரரசு வைரமுத்துவும் தன் பங்குக்கு ரூ.5லட்சம் நிதி அறிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios