’ரஜினி 168’ தனது அடுத்த பட இயக்குநரையும் கன்ஃபர்ம் செய்த சூப்பர் ஸ்டார்...
ஏ.ஆர். முருகதாஸின் ‘தர்பார்’ படத்தின் படப்பிடிப்புக்காக இன்று மும்பை கிளம்ப உள்ள நிலையில், தனது அடுத்த பட இயக்குநராக கே.எஸ். ரவிக்குமாரை ரஜினி இறுதி செய்துள்ளதாகத் தெரிகிறது. இது தொடர்பாக சூப்பர் ஸ்டாரை சற்றுமுன்னர் அவரது போயஸ் தோட்ட இல்லத்தில் சந்தித்துப் பேசினார் கே.எஸ்.ரவிக்குமார்.
ஏ.ஆர். முருகதாஸின் ‘தர்பார்’ படத்தின் படப்பிடிப்புக்காக இன்று மும்பை கிளம்ப உள்ள நிலையில், தனது அடுத்த பட இயக்குநராக கே.எஸ். ரவிக்குமாரை ரஜினி இறுதி செய்துள்ளதாகத் தெரிகிறது. இது தொடர்பாக சூப்பர் ஸ்டாரை சற்றுமுன்னர் அவரது போயஸ் தோட்ட இல்லத்தில் சந்தித்துப் பேசினார் கே.எஸ்.ரவிக்குமார்.
இனி தனது அரசியல் ஈடுபாடு என்பது போயஸ் இல்லத்தில்,விமான நிலையங்களில் பத்திரிகையாளர்களுக்குத் தரப்படும் 5 நிமிடப் பேட்டி மட்டுமே என்று தெளிவாக முடிவெடுத்திருக்கும் ரஜினி, அடுத்தடுத்து பிசியாக படங்களில் நடிப்பதையே விரும்புகிறார். இதன் தொடர்ச்சியாக ‘தர்பார்’ படத்தின் ஷூட்டிங் துவங்குவதற்கு முதல்நாளே தனது அடுத்த பட இயக்குநரையும் தயாரிப்பாளரையும் முடிவு செய்திருக்கிறார்.
இன்று நண்பகலில் ரஜினியை அவரது போயஸ் இல்லத்தில் சந்தித்த கே.எஸ்.ரவிக்குமார் சுமார் ஒரு மணிநேரம் வரை அவருக்குக் கதை சொல்லியிருக்கிறார். அந்தக் கதை ரஜினிக்கு ஓ.கே. என்பதை உறுதிப்படுத்தும் விதமாக அடுத்த சில நிமிடங்களில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு ரஜினியைச் சந்தித்து ஒரு பெரிய தொகையை அட்வான்ஸாக வழங்கியிருக்கிறார்.
பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள ‘தர்பார்’ படப்பிடிப்பு அநேகமாக செப்டெம்பர் அல்லது அக்டோபரில் முடியக்கூடும் என்பதால் ரஜினி ரவிக்குமார் காம்பினேஷனின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் துவங்கலாம். ரஜினிக்கு ‘முத்து’,’படையப்பா’ என்ற இரு ஹிட் படங்களையும் ‘லிங்கா’ என்ற மங்காப்புகழ் பெற்ற தோல்விப்படத்தையும் கொடுத்திருக்கிறார் கே.எஸ்.ரவிக்குமார்.