Rajamouli Latest: அடர்ந்த காட்டு பகுதியில் ஷூட்டிங் பணியை துவங்கிய ராஜமவுலி...அடுத்த படம் யாருடன் தெரியுமா..?
Rajamouli Latest: ஆர்.ஆர்.ஆர் திரைப்படம், வசூலில் 800 கோடியை கடந்து வெற்றி பெற்றதையடுத்து, மகேஷ் பாபுவை வைத்து அடுத்த படத்தை ராஜமவுலி இயக்கி வருகிறார்.
ஆர்.ஆர்.ஆர் திரைப்படம், வசூலில் 800 கோடியை கடந்து வெற்றி பெற்றதையடுத்து, மகேஷ் பாபுவை வைத்து அடித்த படத்தை ராஜமவுலி இயக்கி வருகிறார்.
சுமார் 800 கோடி பட்ஜெட்டில், எடுக்கப்படும் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஆப்பிரிக்க காட்டு பகுதியில் துவங்கியுள்ளது. பான் இந்தியா திரைப்படமாக எடுக்கப்படும், இதற்கு விஜயேந்திர பிரசாத் கதை எழுதியுள்ளார்.
பிரம்மாண்ட இயக்குனர் ராஜமௌலி:
தெலுங்கு இயக்குனர் ராஜமௌலி பாகுபலி , மாவீரம் வெற்றியை இந்திய சினிமாவில் பிரமாண்ட இயக்குனராக வலம் வருகிறார். இவருடைய படத்தில். பிரம்மாண்டத்திற்கு கொஞ்சமும் பஞ்சம் இருக்காது. இவரது இயக்கத்தில், உருவான பாகுபலி, மாவீரம் திரைப்படத்தில் கிராஃபிக் காட்சிகள் அதிக அளவில் இடம்பெற்றுள்ளதால், பான் இந்தியா இயக்குனராக வலம் வருகிறார்.இவருடைய இயக்கத்தில், தற்போது 'ஆர்.ஆர்.ஆர்' தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில், பான் இந்தியா திரைப்படமாக ஓடி கொண்டிருக்கிறது.
ஆர்.ஆர்.ஆர் வெற்றி:
இயக்குனர் ராஜமௌலி ஆர் ஆர் ஆர் படத்தில், தெலுங்கு சினிமாவின் இரு பெரும் நடிகர்களான ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர். ஆகியோரை கதாநாயகர்களாக களம் இறக்கியுள்ளார். இவர்கள் இருவருக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும், ஆலியா பட், அஜய் தேவ்கன், ஒலிவியா மாரிஸ், சமுத்திரக்கனி என பல்வேறு நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
வசூல் சாதனை:
ரிலீஸ் ஆன முதல் நாளில் மட்டுமே உலகம் முழுவதும் சேர்த்து ரூ. 230 கோடிக்கு மேல் வசூலித்திருந்தது. இரண்டாவது நாள் முடிவில், ரூ.340 கோடியை தாண்டி வசூலை குவித்தது. மூன்றாவது நாளில் 500 கோடிக்கும் அதிமாக வசூலித்திருந்தது. இந்நிலையில், தற்போது வரை படம் 850 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது.
அடர்ந்த ஆப்பிரிக்க காட்டு பகுதியில் ஷூட்டிங்:
ஆர்.ஆர்.ஆர் திரைப்படம், வசூலில் 800 கோடியை கடந்து வெற்றி பெற்றதையடுத்து, மகேஷ் பாபுவை வைத்து அடித்த படத்தை ராஜமவுலி இயக்கி வருகிறார். சுமார் 800 கோடி பட்ஜெட்டில், எடுக்கப்படும் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஆப்பிரிக்க காட்டு பகுதியில் துவங்கியுள்ளது. பான் இந்தியா திரைப்படமாக எடுக்கப்படும், இதற்கு விஜயேந்திர பிரசாத் கதை எழுதியுள்ளார்.
ராஜமவுலி இயக்கத்தில் அடுத்த படம்:
மகேஷ் பாபுவை வைத்து எடுக்கப்படும், 800 கோடி பட்ஜெட் படம் முடிவடைந்த பிறகு, அடுத்த படத்தை அல்லு அர்ஜுனை வைத்து இயங்க ராஜமவுலி முடிவு செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.
சமீபத்தில், அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் வெளியான புஷ்பா திரைப்படம், பான் இந்தியா திரைப்படமாக வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. அதிலும், குறிப்பாக ஓ மாம பாடல் மற்றும் சாமியோ சாமியோ பாடல் ஏகோபித்த வரவேற்பை பெற்று தந்தது குறிப்பிடத்தக்கது.