கவர்ச்சிக்கும், ரொமான்ஸுக்கும் மறுப்பு தெரிவித்தால்.. டாடா காட்டி வீட்டிற்கு அனுப்பப்பட்ட முன்னணி நடிகைகள்..!
Popular heroines: எவ்வளவு காசு கொடுத்தாலும் கவர்ச்சியில் நடிக்க மாட்டேன் என்று சொன்னதால், நதியா முதல் 6 முன்னணி நடிகைகள் ஓரம் கட்டப்பட்டு தற்போது முற்றிலும் ஒதுங்கி விட்டனர். அவர்கள் யார் என்பதை பற்றி பார்ப்போம்.
எவ்வளவு காசு கொடுத்தாலும் கவர்ச்சியில் நடிக்க மாட்டேன் என்று சொன்னதால், நதியா முதல் 6 முன்னணி நடிகைகள் ஓரம் கட்டப்பட்டு தற்போது முற்றிலும் ஒதுங்கி விட்டனர். அவர்கள் யார் என்பதை பற்றி பார்ப்போம்.
இன்றைய இளம் நடிகைகளின் பட வாய்ப்பினை பிடிப்பதற்கு ஷார்ட் ரூட்டாக கவர்ச்சியை ஆயுதமாக கையில் எடுத்துள்ளனர். அதனால், பெரும்பாலானோருக்கு பட வாய்ப்புகள் எளிதில் கிடைத்தன. ஆனால், பல முன்னணி நடிகைகள் கவர்ச்சி காட்ட மறுப்பு தெரிவித்தனர், ஒருசில நடிகைகள் மட்டுமே சிறிது தயக்கத்துடனே கவர்ச்சியான பாத்திரத்தில் ஏற்று நடித்தார்கள்.
கவர்ச்சி காட்டுவதற்கு என்று தனியாக இருந்த சில்க் ஸ்மிதா, டிஸ்கோ சாந்தி உட்பட பல நடிகைகள் அதிகம் பிரபலம் அடைந்தனர். அப்படி எவ்வளவு காசு கொடுத்தாலும், கவர்ச்சிக்கு காட்டமாட்டேன் என்று அடம் பிடித்த நடிகைகள் சிறிது காலத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து ஓரம் கட்டப்பட்டு தற்போது முற்றிலும் ஒதுங்கி விட்டனர். அவர்கள் யார் என்பதை பற்றி பார்ப்போம்.
நதியா:
80 காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் இளசுகளின் மனதில் நீங்காத இடம் பிடித்து கனவு கன்னியாக வலம் வந்தவர். அந்த சமயத்தில் கவர்ச்சி படங்களில் நடிக்க விருப்பம் இல்லாமல், மிக விரைவில் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். சினிமா துறையில் நீண்ட கால இடைவெளிக்கு பிறகு, ஜெயம் ரவிக்கு அம்மா கேரக்டரில் கடந்த 2004 ம் ஆண்டு வெளிவந்த (M Kumaran Son Of Mahalakshmi) படத்தின் மூலம் களமிறங்கி இருந்தார். அதனை தொடர்ந்து, பல அம்மா கேரக்டரில் நடிக்கும் படங்களுக்கு அதிக முக்கியத்துடன் கொடுத்து வருகிறார்.
சுவலட்சுமி:
1995 ஆம் ஆண்டில் வெளிவந்த ஆசை திரைப்படத்தின் மூலம், சுவலட்சுமி அஜித்துக்கு ஜோடியாக தனது பயணத்தை துவங்கினார். முதல் படத்திலேயே மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த இவர் கவர்ச்சிக்கு மறுப்பு தெரிவித்து பிறகு, குடும்ப குத்துவிளக்கான கேரக்டர்களையே தேர்ந்தெடுத்து நடித்தார். அதில் லவ் டுடே படத்தை தவிர்த்து, மற்ற திரைப்படங்கள் அனைத்தும் படு தோல்வியை சந்தித்தன. இதையடுத்து, சினிமாவில் இருந்து முற்றிலும் விலகி இருந்த இவர் தற்போது, ம்மா கேரக்டரில் தலை தூக்க துவங்கியுள்ளார்.
சங்கீதா:
குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான இவர், 50-க்கும் மேற்பட்ட படங்களில் தமிழிலும் மலையாளத்திலும் நடித்துள்ளார். இவர் விஜய் நடிப்பில் வெளிவந்த பூவே உனக்காக படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். இதையடுத்து, எல்லாமே என் ராசாதான் படத்தின் மூலமும் பிரபலமானவர். இருப்பினும், இவர் நடித்த ஒரு திரைப்படங்களில் கூடகவர்ச்சியான உடை அணிந்து நடித்தது கிடையாது. தற்போது சினிமாவை விட்டு விலகி இருக்கும் இவர் குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தி வருகிறார்.
இளவரசி:
சம்சாரம் அது மின்சாரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமாக அறியப்பட்டார். இவர், எப்போதும் குடும்ப குத்துவிளக்காக நடிக்கும் கதாபாத்திரங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வந்தார். கிளாமர் கேரக்டரை மறுத்து ஹீரோயினுக்கு அக்கா, அண்ணி போன்ற வேடங்களில் நடித்து வந்தார். இப்போது அவர் தற்போது சினிமாவை விட்டு விலகி இருக்கிறார். தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பது யாரும் தெரியாது.