Asianet News TamilAsianet News Tamil

பிக் பாஸ் வீட்டில் கதறி அழுத மும்தாஜ்…! காரணம் செண்ட்ராயனா?

mumtaz cried vigorously in big boss house
mumtaz cried vigorously in big boss house
Author
First Published Jun 21, 2018, 12:33 PM IST


பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்று தான் முதல் முதலாக பிரச்சனை ஒன்று வெடித்திருக்கிறது. மும்தாஜ் மற்றும் நித்யா இடையே துவங்கிய இந்த பனிப்போர். இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது என்பதை, முதலாவதாக இன்று வெளியான பிக் பாஸ் பிரமோ வெளிக்காட்டி இருந்தது.

mumtaz cried vigorously in big boss house

தற்போது பிக் பாஸின் இரண்டாவது பிரமோ வெளியாகி இருக்கிறது. இந்த பிரமோவின் போது மும்தாஜ் செண்ட்ராயனுடன், கட்டிப்பிடி கட்டிப்பிடிடா பாடலுக்கு நடனமாடும் காட்சி, முதலில் வருகிறது. தொடர்ந்து செண்ட்ராயன் ”நான் மும்தாஜ் கூட டான்ஸ் ஆடிட்டேன் என மகிழ்ச்சியில் துள்ளிகிறார்”.

mumtaz cried vigorously in big boss house

ஆனால் அதனை தொடர்ந்து வந்த காட்சிகளில் மும்தாஜ் கதறி அழுகிறார். அவரை அங்கிருக்கும் சக போட்டியாளர்கள் சமாதானம் செய்கின்றனர். தொடர்ந்து ஒரு குரல் இவன் தான் மும்தாஜை அழ வைக்கிறான் என குற்றம் சாட்டுகிறது. அதற்கு சென்றாயனின் முகத்தை பிரமோவில் காட்டுகின்றனர். தொடர்ந்து வெளிய போடா நீ என்றும் ஒரு குரல் கேட்கிறது.

 

😢😢 #பிக்பாஸ் - தினமும் இரவு 9 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil #VivoBiggBoss @Vivo_India pic.twitter.com/fAF3VRGazc

— Vijay Television (@vijaytelevision) June 21, 2018

இந்த பிரமோவில் இதற்கெல்லாம் காரணம் செண்ட்ராயன் என்பது போல காட்டி இருக்கிறார்கள். ஆனால் பிக் பாஸ் பிரமோ எப்போதும் எதிர்பார்ப்பை கூட்ட இப்படி தான் வடிவமைக்கப்படும். நிகழ்ச்சியை பார்த்தால் உள்ளே நடந்தது பிரச்சனையாகவே இருக்காது. ஒரு வேளை மும்தாஜ் அவரின் குடும்ப நபர்களை நினைத்து கூட அழுதிருக்கலாம். என்ன நடந்தது என்பது இன்றைய நிகழ்ச்சியில் தான் தெரியும்.

Follow Us:
Download App:
  • android
  • ios