Asianet News TamilAsianet News Tamil

என்ன சார் இதெல்லாம்...ஆழ்வார்கடியான் நம்பி ரோலுக்காக ஜெயராமும் சரக்கு வாங்கி தந்த மணிரத்னம் ?

அதை கொஞ்சம் கூட மிச்சம் வைக்காமல் குடித்தே தீர வேண்டும் என்ற கட்டளையும் போட்டுள்ளார். அப்பொழுதுதான் காலையில் பார்க்கும்போது வயிறு தொப்பை விழுந்தது போல் இருக்கும் என கூறியுள்ளார் மணிரத்னம்.

mani ratnam who bought beer for jayaram for ponniyin selvan
Author
First Published Sep 30, 2022, 4:11 PM IST

இன்று பிரம்மாண்டமாக வெளியாகி ரசிகர்களின் ஏகபோக பாராட்டுகளை பெற்று வரும் மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் குறித்த பேச்சு தான் சமூக ஊடகம் முழுவதும். அதில் வரும் நடிகர், நடிகைகள் மற்றும் சுவாரசிய நிகழ்வுகள் தான் தற்போது விவாத பொருளாக மாறியுள்ளது. மெகா பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்த திரைப்படம் கட்டாயம் ஆயிரம் கோடிகளை தன் வசப்படுத்தும் என பேச்சு அடிபடுகிறது. லைக்கா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் இணைந்து  500 கோடி பட்ஜெட்டில் தயாரித்துள்ள பொன்னியின் செல்வன் படத்தில் விக்ரம், ஜெயராம், கார்த்தி, ஜெயராம், திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி என எக்கச்சக்க நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர்.

இவர்களின் ரோல்கள் அனைத்தும் ரசிகர்களை கவர்ந்தது. அந்த வகையில் ஜெயராம் நடித்துள்ள ஆழ்வார்கடியான் நம்பி ரோலும் ரசிகர்களை எதிர்த்து விட்டது. அந்த ரோலில் தொப்பையும் தொந்தியுமாக தெனாலிராமன் ஸ்டைலில் காட்சி அளித்திருக்கிறார் ஜெயராம். அவர் குறித்த சுவாரசிய தகவல் ஒன்று தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகளுக்கு...பொன்னியின் செல்வன் குந்தவை திரிஷா...இதுவரை சிக்கிய காதல் கிசுகிசுக்கள் பற்றி தெரியுமா?

mani ratnam who bought beer for jayaram for ponniyin selvan

ஜெயராமை அந்த தோற்றத்திற்கு ஏற்ப உருமாற்றம் அடையும்படி மணிரத்தினம் கூறியுள்ளார். இதற்காக மிகவும் கடினப்பட்டு தொப்பையை உருவாக்க முயற்சி செய்தாராம்  ஜெயராம்.  ஆனால் அவையெல்லாம் வேலை செய்யாமல் போகவே புதிதாக ஒரு ட்ரிக்கை யோசித்த மணிரத்தினம் மற்ற நடிகர்கள் கதாபாத்திரத்திற்காக டயட் போன்றவற்றை செய்து கொண்டிருக்கும் போது ஜெயராமின் ரூமிற்கு மட்டும் தினமும் இரவு பீர் கொடுத்து அனுப்பி உள்ளார்.

mani ratnam who bought beer for jayaram for ponniyin selvan

மேலும் செய்திகளுக்கு...சமுத்திர குமாரி ஐஸ்வர்யா லட்சுமியின் கட்டுடல் மேனிக்கு காரணம் என்ன தெரியுமா?

அதை கொஞ்சம் கூட மிச்சம் வைக்காமல் குடித்தே தீர வேண்டும் என்ற கட்டளையும் போட்டுள்ளார். அப்பொழுதுதான் காலையில் பார்க்கும்போது வயிறு தொப்பை விழுந்தது போல் இருக்கும் என கூறியுள்ளார். இதனை ஜெயராம் தொடர்ந்து செய்து வந்தாராம். இப்படித்தான் அந்த ஆழ்வார்கடியான் நம்பி கதாபாத்திரம் உருவாகியுள்ளது. இதற்காக ஜெயராம் ரிஸ்க் எடுத்து இருப்பது குறித்த தகவல் தான் ரசிகர்களை ஆச்சரியத்தில் ப்டுத்தி உள்ளது. இப்படியும் ரிஸ்க் எடுப்பார்கள் என பலரும் கிண்டல் கமென்ட் செய்து வருகின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios