தனுஷ் தற்போது நடித்து வரும் திருச்சிற்றம்பலம் படத்திலிருந்து தந்தையர் தினத்தை ஒட்டி வெளியான கிளிப்ஸ் ரசிகர்களை பெரிதும் கவர்ந்து வருகிறது.

தனுஷ் கடைசியாக நடித்த 'மாறன்' படம் OTTயில் வெளியானது. இதில் பத்திரிக்கையாளராக தனுஷ் நடித்திருந்தார். படம் போதுமான வரவேற்பை பெறவில்லை. இதையடுத்து தற்போது திருச்சிற்றம்பலம் ரிலீசுக்கு ரெடியாக உள்ளது. இந்த படம் வரும் ஆகஸ்ட் 18 ஆம் தேதி திரையரங்குகளில் வெளிவர உள்ளது. இதிலிருந்து நேற்று ஒரு கிளிப்ஸ் வெளியானது. அதில் பாரதிராஜாவுக்கும் தனுஷுக்கும் இடையே ஒரு தொலைபேசி அழைப்பு , படத்தில் தனுஷின் தாத்தாவாக நடிக்கும் பாரதிராஜா தனது பேரனிடம் மது வாங்க கூறுவதற்கு முன் தந்தையர் தின வாழ்த்துக்களை தனுஷின் தந்தைக்கு சொல்லவில்லையான என கேட்க நாயகன் கோபமாக பேசுகிறார். இதன் மூலம் தனுஷுக்கு தந்தியாக வரும் பிரகாஷ் ராஜ் கண்டிப்பானவராக இருப்பர் என தோன்றுகிறது. பின்னர் நைசாக பேச்சை மாற்றும் தாத்தா மது வாங்கித் தர பேரனிடம் கூறும் காட்சிகள் உள்ளன. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

Scroll to load tweet…

' திருச்சிற்றம்பலம் ' படத்தில் தனுஷ், ராஷி கண்ணா , பிரியா பவானி சங்கர் , நித்யா மேனன் , பிரகாஷ் ராஜ் மற்றும் பாரதிராஜா ஆகியோர் நடித்துள்ளனர். படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார் . நடிகர்கள் மற்றும் நடிகைகள் நடித்த பாத்திரங்கள் மற்றும் கதாபாத்திரங்கள் கடந்த வாரம் திரைப்பட தயாரிப்பாளர்களால் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டன.

இயக்குநரும் நடிகரும் இணைந்துள்ள நான்காவது படம் இது. இதற்கு முன் மித்ரன் இயக்கத்தில் தனுஷ் 'குட்டி', 'உத்தமபுத்திரன்', 'யாரடி நீ மோகினி' உள்ளிட்டவற்றில் நடித்துள்ளார்.. தனுஷின் கடைசி நான்கு படங்களும் OTT இல் வெளியிடப்பட்டன. மேலும் ரசிகர்கள் இப்போது நடிகரை பெரிய திரைகளில் கொண்டாட ஆவலுடன் காத்திருக்கிறார்கள் மற்றும் 'திருச்சிற்றம்பலம்' வெளியீட்டிற்காக காத்திருக்கிறார்கள். முதலில் ஜூலை 1ஆம் தேதி படத்தை வெளியிடத் திட்டமிடப்பட்டு, தற்போது ஆகஸ்ட் 18ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தனுஷின் டோலிவுட் பிரவேசமான வாத்தி, ஹாலிவுட் கிரே மேன், தமிழில் செல்வராகவனின் நானே வரேன் உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்து ரசிகர்களுக்கு விருந்தாக காத்திருக்கிறது.