Asianet News TamilAsianet News Tamil

அவசர அவசரமாக முன் ஜாமீன் கேட்ட லைக்கா நிறுவன மேலாளர்! அதிரடி உத்தரவு போட்டு ஆப் செய்த உயர்நீதிமன்றம்!

கடந்த வாரம் பிப்ரவரி 19 ஆம் தேதி, சென்னை பூந்தமல்லியில் உள்ள இவிபி பிலிம் சிட்டியில், இரவு ஷூட்டிங் நடந்து கொண்டிருந்த போது... கிரேன் சரிந்து விழுந்ததில், மூன்று பேர் உயிரிழந்தனர். மேலும் 9 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
 

Lyca production company manager asked for bail before emergency
Author
Chennai, First Published Feb 27, 2020, 4:06 PM IST

கடந்த வாரம் பிப்ரவரி 19 ஆம் தேதி, சென்னை பூந்தமல்லியில் உள்ள இவிபி பிலிம் சிட்டியில், இரவு ஷூட்டிங் நடந்து கொண்டிருந்த போது... கிரேன் சரிந்து விழுந்ததில், மூன்று பேர் உயிரிழந்தனர். மேலும் 9 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்த விபத்து குறித்து லைக்கா நிறுவனத்தின் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. மேலும் இன்று காலை 'இந்தியன் 2 ' படத்தின் இயக்குனர், ஷங்கர் சென்னை வேப்பேரியில் உள்ள குற்ற பிரிவு போலீசார் நடத்திய 3 மணிநேர விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தார்.

Lyca production company manager asked for bail before emergency

இந்நிலையில் லைக்கா நிறுவன தயாரிப்பு மேலாளர் சுந்தர்ராஜன், சென்னை உயர்நீதி மன்றத்தில், முன் ஜாமீன் கூறி மனு தாக்கல் செய்தார்.

இந்த முன்ஜாமின் மனு மீதான விசாரணையை அதிரடியாக மார்ச் 2-ஆம் தேதி உயர்நீதி மன்றம் ஒதுக்கி வைத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios