எல்லாம் நாசமா போச்சி? ஜோதிகாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி!
தமிழில் வெளியாகும் புதிய படங்கள் இணையதளங்களிலும் உடனே வெளியாகி விடுகின்றன. சமீபத்தில் திரைக்கு வந்த ரஜினிகாந்த், விஜய், அஜித், சூர்யா, விஷால், கார்த்தி, உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் அனைத்து படங்களுக்கும் இணையத்தளத்தில் வெளியானது. இதனால் அந்த படங்களின் வசூல் பெரிதும் பாதிக்கப்பட்டது.
தமிழில் வெளியாகும் புதிய படங்கள் இணையதளங்களிலும் உடனே வெளியாகி விடுகின்றன. சமீபத்தில் திரைக்கு வந்த ரஜினிகாந்த், விஜய், அஜித், சூர்யா, விஷால், கார்த்தி, உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் அனைத்து படங்களுக்கும் இணையத்தளத்தில் வெளியானது. இதனால் அந்த படங்களின் வசூல் பெரிதும் பாதிக்கப்பட்டது.
இதை தடுக்க தயாரிப்பாளர்கள் சங்கம் முன் எச்சரிக்கை எடுத்தது. தியேட்டர்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தவும் ஏற்பாடு செய்தது. அதையும் மீறி இப்போது ஜோதிகா நடித்து கடந்த வெள்ளிக்கிழமை திரைக்கு வந்த 'காற்றின் மொழி' படமும் இணையதளத்தில் வெளியாகி விட்டது. வெளியாவதற்கு தடை பெற்று இருந்தனர்.
ஆனாலும் திருட்டுத்தனமாக சில மர்ம நபர்கள் இந்த படத்தை வெளியிட்டு விட்டனர். இதனால் படத்தை பலரும் பதிவிறக்கம் செய்து பார்த்து வருகிறார்கள். இதனால் வசூல் பாதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்த நிலையில் இப்படி ஆகியுள்ளது. ஜோதிகா நடிப்புக்கும் பாராட்டுக்கள் குவிந்தன.
இதனால் படம் நல்ல வசூல் பார்க்கும் என்று படக்குழுவினர் எண்ணினர். ஆனால் தற்போது படம் இணையதளத்தில் வெளியாகி விட்டதால் படக்குழுவினர் அதிர்ச்சியில் உள்ளனர். படக்குழுவினர் சார்பில் தியேட்டர்களில் படத்தை செல்போனிலும் கேமராவில் படம் பிடிப்பதை தடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. சில தியேட்டர்களில் கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தி இருந்தனர். ஆனால் எல்லாம் நாசமாகிவிட்டது என்று படக்குழுவினர் புலம்பி வருகிறார்களாம். ஜோதிகாவும் படம் இணையத்தில் வெளியானதால் அதிர்ச்சியில் உறைந்துள்ளதாக கூறப்படுகிறது.