மழையில் மழலையாக மாறிய கஸ்தூரி! அதுக்குன்னு இப்படியா?
நடிகை கஸ்தூரி, தற்போது மீண்டும் திரைப்படங்களில் அதிக கவனம் செலுத்த துவங்கியுள்ளார். தற்போது போலீஸ் அதிகாரியாக மிகவும் போல்ட்டான கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.
நடிகை கஸ்தூரி, தற்போது மீண்டும் திரைப்படங்களில் அதிக கவனம் செலுத்த துவங்கியுள்ளார். தற்போது போலீஸ் அதிகாரியாக மிகவும் போல்ட்டான கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.
சினிமா மட்டும் இன்றி, அரசியல் விஷயத்திலும் தன்னுடைய மனதில் படும் கருத்தை, தைரியமாக தெரிவித்து வருகிறார். அதே நேரத்தில் பாகுபாடு இன்றி, சில அரசியல் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்கிறார்.
மேலும் சமூக அக்கறை கொண்ட செயல்களிலும் ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் வெளியான நீட் தேர்வில் தோல்வியடைந்த மாணவிகள் சிலர் தற்கொலை முடிவை கையில் எடுத்த போது, அவர்களை ஊக்க படுத்தும் விதமாக ஒரு ட்விட் போட்டிருந்தார். இது, அனைவராலும் வரவேற்கப்பட்டது.
இந்நிலையில் மழையில் மழையாக மாறியுள்ளார் கஸ்தூரி. இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், மிகவும் குட்டியான ஆடை அணிந்து மழையில் ஆட்டம் போடுகிறார். இதற்கு சிலர் விமர்சித்து வந்தாலும், சில ரசிகர்கள் இந்த வீடியோவில் கஸ்தூரி பார்ப்பதற்கு மிகவும் கியூட்டாக இருக்கிறார் என கூறி வருகிறார்கள்.