நானே களத்தில் இறங்கியிருப்பேன்… எடப்பாடியை நேரடியாக எதிர்க்கும் ரஜினிகாந்த் !!

திமுக தலைவர் கருணாநிதி மரணமடைந்ததையடுத்து அவரது உடலை அண்ணா சதுக்கத்தில் அடக்கம் செய்ய வேண்டும் என திமுக சார்பில் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.. ஆனால் அதை நிராகரித்த எடப்பாடி பழனிசாமி, காமராஜர் நினைவிடத்தில் இடம் ஒதுக்கித் தருவதாக கூறினார்.

இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்ததோடு, கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் ஒதுக்கித் தரவேண்டும் என கூறினார். நடிகர் ரஜினிகாந்த்தும் இது தொடர்பாக கோரிக்கை விடுத்திருந்தார்.



இந்நிலையில் மறைந்ததிமுக., தலைவர்கருணாநிதிக்குசென்னைகாமராஜர்அரங்கில்திரையுலகினர்சார்பில்நினைவஞ்சலிகூட்டம்நடைபெற்றது. இதில்திரையுலகத்தைசேர்ந்தபலர்பங்கேற்றனர்.

கருணாநிதியின்உருவப்படத்திற்குமெழுவர்த்திஏந்தியும், மலர்தூவியும்திரையுலகினர்அஞ்சலிசெலுத்தினர். இந்தநிகழ்ச்சியில்நடிகர்ரஜினியும்பங்கேற்றுப் பேசினார். அப்போது கருணாநிதிஇல்லாததமிழ்நாட்டைஎன்னால்நினைத்துகூடபார்க்கமுடியவில்லை என உருக்கமாக தெரிவித்தார்.

50 ஆண்டுகளில்எவ்வளவுசோதனைகள், சூழ்ச்சிகள், துரோகங்கள் எல்லாவற்றையும்வென்றுதிமுக., தலைவராகஇருந்தவர் கருணாநிதி என்றும் , . இவரால்அரசியலுக்குவந்தவர்கள்லட்சம்பேர். என்னுடன்நட்புகொள், இல்லையென்றால்என்னைஎதிரியாக்கிகொள்எனதமிழகத்தில்அரசியல்சதுரங்கம்செய்தவர் கருணாநிதி என புகழாரம் சூட்டினார்.

.மெரினாவில்உள்ள அண்ணா சதுக்கத்தில் கருணாநிதிக்கு இடம்கொடுக்ககோர்ட்அனுமதித்தது. நல்லவேளைநீங்கள் மேல்முறையீடுசெய்யவில்லை. அப்படி செய்திருந்தால் நானேகளத்தில் இறங்கிபோராடிஇருப்பேன் என அதிரடியாக தெரிவித்தார்.