'காத்து வாக்குல ரெண்டு காதல்' படத்தில் சூப்பர் அப்டேட் தந்த விக்னேஷ் சிவன்..!
இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் குறித்து சூப்பர் தகவலை வெளியிட்டுள்ளார் இயக்குனர் விக்னேஷ் சிவன்.
நயன் காதலர், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'காத்து வாக்குல ரெண்டு காதல்'. இந்த படத்தில், 'நானும் ரௌடி' தான் படத்தை தொடர்ந்து, மீண்டும் விஜய்சேதுபதி, நயன்தாராவை வைத்து இயக்குகிறார் விக்னேஷ் சிவன், சமந்தாவும் மற்றொரு நாயகியாக நடிக்கிறார். இந்நிலையில் இந்த படம் குறித்து சூப்பர் அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார் விக்னேஷ் சிவன்.
மேலும் செய்திகள்: மெல்லிய சேலையை... லைட்டாக இடை தெரிய கட்டி... இளம் நெஞ்சங்களை இளக வைத்த பிரியா பவானி ஷங்கர்!
'காத்து வாக்குல ரெண்டு காதல்' என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் ஷூட்டிங் முதல் கட்டமாக ஹைதராபாத்தில் துவங்கி நடைபெற்றது. படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் திடீரென லாக்டவுன் காரணமாக படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டது. எனினும் தற்போது படப்பிடிப்புகளுக்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகள்: தந்தையர் தினத்தை சிறப்பாக கொண்டாடும் முன்னணி பிரபலங்கள்... புகைப்பட தொகுப்பு..!
இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் குறித்து சூப்பர் தகவலை வெளியிட்டுள்ளார் இயக்குனர் விக்னேஷ் சிவன். ஏற்கனவே இந்த படத்தில் இருந்து காதலர் தினத்தை முன்னிட்டு வெளியான ’ரெண்டு காதல்’ என்ற சிங்கிள் பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து, சமூக வலைத்தளம் மூலம் ரசிகர்களுடன் பேசிய விக்னேஷ் சிவனிடம் ரசிகர் ஒருவர் இரண்டாவது சிங்கிள் பாடல் குறித்து கேள்வி எழுப்பிய நிலையில்.... வரும் ஜூலை மாதம் இரண்டாவது சிங்கிள் பாடல் வெளியிடப்படும் என அறிவித்துள்ளார். இந்த தகவல் தற்போது நயன் - சமந்தா ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..