"என் நிலை யாருக்கும் வரக்கூடாது.." பூச்சியிடம் பேசிய ஜூலி...
பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்ட சில நாட்களில் ஓவியா தனியாக அமர்ந்து கிளிகளிடம் பேசிக்கொண்டிருந்தார். இதை பார்த்த ரசிகர்கள் பலர் ஓவியா நடிப்பதாக நினைத்தார்கள். நாளடைவில் தான் தெரிந்தது ஓவியாவின் இயல்பே இது தான் என்று.
இந்நிலையில் தற்போது ஓவியாவை போலவே ஒரு பட்டாம்பூச்சியை பிடித்து வைத்துக்கொண்டு லூசு போல் அதற்கு அறிவுரை கூறியுள்ளார்.
அப்படி என்ன பேசினார் தெரியுமா ஜூலி... "நீங்க எப்படி தனியா வந்தீங்க இங்க, உன்னையும் வெளியில அனுப்பிட்டாங்களா... அதுக்குலாம் பயப்பட கூடாது.. வாழ்த்து வெற்றியடைஞ்சு காட்டணும்.
இதுபோல வீட்டை விட்டு வெளியே அனுப்பிச்சிட்டு மத்தவங்களாம் வீட்டுக்குள்ள சந்தோஷமா இருக்குறது தப்பு. எதிரியா இருந்தாக்கூட இதுபோன்ற கஷ்டமெல்லாம் வரக்கூடாது... ஏன் ஓவியாவிற்க்கே வந்தாலும் தப்புதான் என பூச்சியிடம் பேசினார் ஜூலி.