இத்தனை மணி நேரம் நிர்வாணமாக நின்றால்தான் சம்பளம்..! பிரபல நாயகிக்கு தயாரிப்பாளர் செய்த கொடுமை..!
பொதுவாக சினிமாவில் சாதித்த நடிகைகள் பலர் பல்வேறு கஷ்டங்களைக் கடந்துதான் சாதித்துள்ளனர். இதனை பல நடிகைகள் ஒப்புக்கொண்டும் உள்ளனர்.
நடிகை பாவனா பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பிறகு, தமிழ், மற்றும் மலையாள திரையுலகைச் சேர்ந்த பிரபல நடிகைகள் பலர் தாங்களும் பல்வேறு பாலியல் சீண்டல்களுக்கு ஆளானதாகத் தெரிவித்திருந்தனர்.
இப்படி, பல்வேறு மொழிப் படங்களிலும் போராடி முன்னணி இடத்திற்கு வந்த நடிகைகள் பலரின் வாழ்வில் ஏதோ ஒரு பகுதி கருப்பு நிறப் பகுதியாகத் தான் உள்ளது. இதில் சிக்காத ஹீரோயின்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அவர்களின் வாழ்க்கைக் கதைகளை அவ்வப்போது தெரிவித்து விடுகின்றனர். நல்ல வசதியான குடும்பத்தில் இருந்து வந்த ஹீரோயின்கள் கூட இதில் சிக்கி விடுகிறார்கள். அண்மைக் காலமாக, தாங்கள் பட்ட கஷ்டங்களை பலரும் வெளிப்படையாக அறிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் ஹாலிவுட்டில் கொடிகட்டிப் பறக்கும் ஆஸ்கர் நாயாகி ஜெனிபர் லோரன்ஸ், ஆரம்பக்காலத்தில் படங்களில் நடிக்க முயற்சித்த போது ஒரு தயாரிப்பாளர் இவரை நிர்வாணமாக 5 மணி நேரத்திற்கு மேல் நிற்க வைத்தாராம், அப்படி நிற்க மறுத்த பெண்களுக்கு சம்பளத்தில் பாதியை பிடித்தார்களாம். இந்தத் தகவலை ஜெனிபர் சமீபத்தில் கலந்துக்கொண்ட நிகழ்ச்சியில் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.