முன்னாள் ராஜ்யசபா எம்.பி.யும், நடிகையுமான ஜெய பிரதாவின் அண்ணன் ராஜா பாபு காலமானார். நடிகை இன்ஸ்டாகிராமில் உருக்கமான பதிவு போட்டு தன்னோட வருத்தத்தை தெரிவித்துள்ளார்..

நடிகையும், முன்னாள் ராஜ்யசபா எம்.பி.யுமான ஜெய பிரதா தன்னோட அண்ணன் ராஜா பாபு மறைவு செய்தியை பகிர்ந்துள்ளார். இந்த தகவலை நடிகை ஜெய பிரதா இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அதில் தன்னுடைய அண்ணன் போட்டோவை பகிர்ந்து தன் சோகத்தை வெளிப்படுத்தி உள்ளார். தன் அண்ணன் இறந்து போன விஷயத்தை தன்னுடைய ஃபாலோவர்ஸிடம் பகிரும் போது மிகவும் உருக்கமான வார்த்தைகளையும் அதில் எழுதி உள்ளார்.

அண்ணனை பற்றி அவர் பதிவிட்டுள்ளதாவது : "என்னோட அண்ணன் ராஜா பாபு இறந்து போன விஷயத்தை உங்களுக்கு சொல்றதுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. அவர் இப்போ நம்மளோட இல்ல. ஹைதராபாத்ல அவர் இறந்துட்டாரு. எல்லாரும் ப்ரே பண்ணுங்க. இன்னும் நிறைய விஷயங்களை சீக்கிரமா சொல்றேன்"னு பதிவிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்... முதல் படத்திற்கு 10 ரூபாய் சம்பளம்! இரண்டே வருடத்தில்... லட்சங்களில் சம்பளம் வாங்கிய கமல் பட நாயகி?

View post on Instagram

ராஜா பாபு பொது வாழ்க்கையில அவ்வளவா தெரியாதவரா இருந்தாரு. ஆனா ஜெய பிரதா வாழ்க்கையில ரொம்ப முக்கியமான ஒருத்தரா இருந்தாரு. நடிகை எப்பவும் தன்னோட குடும்பத்துக்கு ரொம்ப நெருக்கமா இருந்தாங்க. இந்த இழப்பு அவங்களுக்கு மிகுந்த மன வலியையும் கொடுத்திருக்க கூடும். இந்த கஷ்டமான நேரத்துல சினிமாவுல இருக்கற நிறைய பிரபலங்கள் அவங்களுக்கு சப்போர்ட் பண்ணி ஆறுதல் சொன்ன வண்ணம் உள்ளனர்.

ஜெய பிரதா பாலிவுட்லயும், தென்னிந்திய சினிமாவுலயும் நடிச்சு ரொம்ப ஃபேமஸ் ஆனாங்க. சர்கம், தோஃபா, ஆக்ரி ராஸ்தா மாதிரி படங்கள்ல நடிச்சிருக்காங்க. அவங்க அரசியல்லயும் ரொம்ப ஆக்டிவா இருந்தாங்க. ராஜ்யசபால எம்.பி.யா இருந்திருக்காங்க. அவங்க ரொம்ப பிஸியா இருந்தாலும் தன்னோட குடும்பத்துக்கு எப்பவும் முக்கியத்துவம் கொடுத்திருக்காங்க.

அவங்க இன்ஸ்டாகிராம்ல போட்ட போஸ்ட்டுக்கு நிறைய பேரு ஆறுதல் சொல்லிட்டு இருக்காங்க. ராஜா பாபுவ ஞாபகப்படுத்திட்டு அவங்கள பத்தின நினைவுகள நிறைய பேரு ஷேர் பண்ணிட்டு இருக்காங்க. ஒரு யூசர் 1988ல மும்பைல அவங்கள பாத்தத ஞாபகப்படுத்திட்டு இருக்காங்க. இன்னும் நிறைய பேரு அவங்க ஆத்மா சாந்தி அடையணும்னு ப்ரே பண்ணிட்டு இருக்காங்க.

இதையும் படியுங்கள்... நடிகை ஜெயபிரதாவுக்கு சிறை தண்டனை உறுதி! 15 நாட்களுக்குள் 20 லட்சம் டெபாசிட் செய்யவேண்டும் நீதிமன்றம் அதிரடி!