என்ன பார்த்த அப்படி என்ன உனக்கு ஏறுது... அடைமொழி வச்சி சிக்கிய அபிஷேக்கிடம் எகிறும் இசை வாணி..!
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் இதுவரை ரசிகர்கள் எதிர்பார்த்த அளவுக்கு சண்டை காட்சிகளில் யாரும் முட்டி மோதிக்கொள்ளவில்லை என்றாலும் இனி வரும் வாரங்களில் பஞ்சாயத்துக்கு குறைவிருக்காது என்றே தெரிகிறது.
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் இதுவரை ரசிகர்கள் எதிர்பார்த்த அளவுக்கு சண்டை காட்சிகளில் யாரும் முட்டி மோதிக்கொள்ளவில்லை என்றாலும் இனி வரும் வாரங்களில் பஞ்சாயத்துக்கு குறைவிருக்காது என்றே தெரிகிறது.
இந்நிலையில் ஏற்கனவே வெளியான மூன்றாவது புரோமோவில், இசைவானின்னு இம்சை இசை என பெயர் வைத்ததால்... சென்னை லோக்கல் பாஷையில் அவர் அபிஷேக்கிடம் வரிந்து கட்டுவது வெளியாகியுள்ளது. ஏற்கனவே வெளியான புரோமோவில், அபிஷேக் மற்றவர்களை பற்றி கூறுவதும், பிக்பாஸ் வீட்டில் ஒரு குரூப் உருவாகி விட்டது என அபிஷேக், ப்ரியங்கா, நிரூப் ஆகியோர் பேசி கொண்டிருக்கும் காட்சிகள் வெளியானது.
மேலும் செய்திகள்: 'ஜோதா அக்பர்' ஐஸ்வர்யா ராய்க்கே சவால் விடும் கெட்டப்பில் சாயா சிங்..!! கலக்கல் போட்டோஸ் ஷூட்...
இதை தொடர்ந்து வெளியாகியுள்ள மூன்றாவது புரோமோவில், அபிஷேக் அனைவருக்கும் அடைமொழி வைக்கிறார். "அனாமத்து அண்ணாச்சி, பாவம் பாவினி, நெருப்பு நிரூப்பு, அசால்ட் அக்ஷரா, தலைவி தாமரை, வௌவால் குரு, இம்சை இசை, என பெயர் வைக்கிறார். இதை கவனித்த இசை, என்னா பிரச்சனை உனக்கு... என்னை பார்த்தா அப்படி என்ன உங்களுக்கு ஏறுது... இதற்க்கு அபிஷேக்கும் லோக்கல் மெட்ராஸ் பாஷையில் பதிலளிக்கிறார். ஆரம்பத்தில் இசை எகிறுவது போல தெரிந்தாலும் இந்த ப்ரோமோ காமெடியில் தான் முடிகிறது".
மேலும் செய்திகள்: அக்கா ஸ்ருதி மற்றும் தந்தை கமல்ஹாசண்டு பிறந்தநாள் கொண்டாடிய அக்ஷரா..! வைரலாகும் புகைப்படம்..!
அதே நேரத்தில் அபிஷேக் அனைவரது கனத்தையும் ஈர்க்கும் விதமாக பிளான் போட்டு விளையாடுகிறாரோ... என்கிற சந்தேகமும் எழுகிறது. இதற்க்கு சாட்சி இன்று வெளியான மூன்று புரோமோக்களிலும் அபிஷேக்கின் ஆதிக்கம் தான் அதிகம் உள்ளது என்பதே...