Asianet News TamilAsianet News Tamil

இளையராஜாவின் பிரசாத் ஸ்டூடியோ வருகை திடீர் ரத்து..! வெளியான பரபரப்பு காரணம்..!

தியானம் செய்வதற்காக பிரசாத் ஸ்டுடியோவிற்கு வருகை தர இருந்த இளையராஜா, திடீர் என தன் வருகையை ரத்து செய்துவிட்டதாக அவரது செய்தி தொடர்பாளர் அறிவித்துள்ளார்.

ilaiyaraja prasad studio visit cancelled
Author
Chennai, First Published Dec 28, 2020, 11:34 AM IST

சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் தான் இசைஞானி இளையராஜாவின் ரெக்கார்டிங் பணிகளை  பல ஆண்டுகளாக மேற்கொண்டு வந்தார். அவருக்கென தனி தியேட்டா் ஒதுக்கி கொடுத்திருந்தது பிரசாத் ஸ்டுடியோ நிா்வாகம். இளையராஜா தனது பெரும்பாலான படங்களுக்கு அங்குதான் இசையமைத்தாா். இளையராஜாவின் திறமையை மதித்து எல்.வி.பிரசாத் இந்த ஏற்பாடுகளை செய்து கொடுத்திருந்தார் என்பது அனைவரும் அறிந்தது தான். 

ஆனால் எல்.வி.பிரசாத்தின் வாரிசுகள் இளையராஜாவின் ஸ்டூடியோவை இடித்துவிட்டு, புது தியேட்டர் கட்ட முடிவு செய்ததால் கடந்த ஒரு வருடமாக பிரசாத் ஸ்டுடியோவில் இருந்து இளையராஜா காலி செய்து தர வேண்டும் என, அதன் நிர்வாகத்தினர் அவருக்கு நெருக்கடி கொடுத்து காலி செய்யவைத்தனர். பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகத்திற்கு எதிராக இயக்குனர் பாரதி ராஜா,  தலைமையில், பிரபலங்கள் ஒன்று கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

ilaiyaraja prasad studio visit cancelled

மேலும் இதுகுறித்து இளையராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் பிரசாத் ஸ்டூடியோவில் உள்ள தன்னுடைய பொருட்களை எடுக்க அனுமதி கோரி தொடர்ந்த வழக்கை கடந்த வாரம் விசாரித்த நீதிமன்றம், அவரது இசை கருவிகள் மற்றும், ஸ்டூடியோவில் உள்ள பொருட்களை எடுக்க அனுமதிக்காதது ஏன் என்றும், இளையராஜாவை சிலமணி நேரம் தியானம் செய்ய கூட அனுமதிக்காதது ஏன்? என்றும் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியது.

ilaiyaraja prasad studio visit cancelled

அப்பொழுது பிரசாத் ஸ்டுடியோ சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன் கூறியதாவது, இளையராஜா பயன்படுத்தி வந்த அரங்கில் தற்போது மென்பொருள் நிறுவனம் இயங்கி வருகிறது. அவரின் பொருட்கள் எல்லாம் வேறு ஒரு அறையில் பத்திரமாக இருக்கிறது. அதை அவர் விரும்பிய நேரத்தில் வந்து எடுத்துக் கொள்ளலாம். ஆனால் தியானம் செய்வது குறித்து உரிமையாளர்களிடம் கேட்க வேண்டும் என்றார்.

ilaiyaraja prasad studio visit cancelled

இதையடுத்து ஒத்திவைக்கப்பட்ட வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, இளையராஜாவை ஸ்டுடியோவுக்குள் அனுமதிக்க முடியாது என்றும், அவர் சார்பில் யாராவது வந்து பொருட்களை எடுத்துச் செல்லட்டும் என்றும் பிரசாத் ஸ்டுடியோ சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கறிஞர் ஒருவரை ஆணையராக நியமிப்பதாகவும், அவருடன் இளையராஜா, பிரசாத் ஸ்டுடியோ உரிமையாளர்கள் செல்லலாம் என்றும் நீதிபதி சதீஷ்குமார் தெரிவித்தார். 

ilaiyaraja prasad studio visit cancelled

பின்னர் இளையராஜா புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணையின் போது நீதிபதிகளே மனிதாபிமான அடிப்படையில் இளையராஜாவுக்கு ஒருநாள் தியானம் செய்ய அனுமதிக்கலாம் என்று கூறப்பட்டது இதனை அடுத்து பிரசாத் ஸ்டூடியோ  நிர்வாகம் ஒரு சில நிபந்தனைகளுடன் தியானம் செய்ய இளையராஜாவை அனுமதித்தது என்ற செய்தி வெளியானது. இந்த நிலையில் திடீரென இளையராஜா தனது வழக்கை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளார்.

இந்நிலையில் இன்று, தியானம் செய்வதற்காக பிரசாத் ஸ்டுடியோவிற்கு வருகை தர இருந்த இளையராஜா, திடீர் என தன் வருகையை ரத்து செய்துவிட்டதாக அவரது செய்தி தொடர்பாளர் அறிவித்துள்ளார். தற்போது இளையராஜா மன உளைச்சலில் இருப்பதால் அவர் இன்று வரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios