Asianet News TamilAsianet News Tamil

ராஜாஜி அரங்கில் தொகுப்பாளர் கோபிநாத் மீது தடியடி.....!!!

gopinath tribute-for-jayalalitha
Author
First Published Dec 6, 2016, 4:33 PM IST


தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக  நேற்று இரவு காலமானார். 

இந்நிலையில் இன்று அவரது உடல் அஞ்சலிக்காக சென்னை ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டது. இவருக்கு பல முக்கிய தலைவர்களும், பிரபுகர்களும், பிரபலங்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ஜெயலலிதாவின் கடைசி நிமிடங்களில்  அவரை எப்படியாவது பார்க்க வேண்டும் என்று மக்கள் கூட்டம் ராஜாஜி அரங்கில் அலைமோதியது.

இந்த கூட்டத்தில் மக்களோடு மக்களாக நீயா நானா கோபியும் கலந்து கொண்டார். ஒரு கட்டத்தில் கூட்டம் கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் தடியடி நடத்தினார்.

இந்த தடியடியில் எதிர்பாராதவிதமாக கோபிநாத் சிக்கிக்கொண்டார். சில அடிகளும் அவர் மீது வீசப்பட்டது. நிலைமையை அறிந்து அவர் அந்த இடத்தை விட்டு சென்று விட்டார்.

அனைவரும் அறிந்த ஒரு பிரபலத்திற்கே இந்த நிலை என்றால், சாமானிய மக்கள் பலர் அவரை பார்க்க அடியையும் வாங்கி கொண்டு நிற்கின்றனர்..... அம்மா அம்மா என்று அழைத்து கொண்டு.

Follow Us:
Download App:
  • android
  • ios