ரசிகர்கள் மத்தியில் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற... குட் நைட் பட நடிகை மீண்டும் அந்த படத்தின் தயாரிப்பில் இணைந்து நடிக்க உள்ள படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
பெரியஹீரோக்களின் படம் மட்டுமே தியேட்டர்களில் நல்ல வசூல் செய்யும் என்பதை மாற்றி விமர்சன ரீதியாக வரவேற்பு பெற்றது மட்டுமின்றி நல்ல வசூலையும் பெற்று தமிழ்சினிமாவுக்கு நம்பிக்கையூட்டும் படமாக அமைந்தது குட்நைட். அப்படத்தைத் தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம் ஆர் பி எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனங்களின் தயாரிப்பில் அடுத்தபடம் தயாராகிறது.

இந்த படத்தை அறிமுக இயக்குனர் பிரபுராம் வியாஸ் எழுதி இயக்குகிறார். இந்தப் புதிய படத்தில் குட்நைட் மணிகண்டனே கதாநாயகனாக நடிக்கிறார். மாடர்ன்லவ் புகழ் ஸ்ரீகெளரி பிரியா கதாநாயகியாக நடிக்கிறார். கண்ணாரவி முக்கியவேடத்தில் நடிக்கிறார். ஷான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைக்க, ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். பரத் விக்ரமன் படத்தொகுப்பு செய்கிறார்.

தற்காலக் காதல் அதில் நடக்கும் நிகழ்வுகள் ஆகியன குறித்த விவாதத்தை சுவாரஸ்யமான திரைக்கதை மூலம் சொல்லக்கூடிய படமாக இது இருக்கும் என்கிறார் இயக்குநர் பிரபுராம்வியாஸ். சென்னை மற்றும் கோவா அருகேயுள்ள கோகர்ணா ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தத் திட்டமிட்டுள்ளனர். அண்மையில் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது. முதல்நாள் படப்பிடிப்பை கிளாப் அடித்துத் தொடங்கிவைத்தார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. இப்போது படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
