அழுத ஓவியாவுக்கு கட்டிப்பிடித்து ஆறுதல் சொன்ன காயத்ரி...
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று வெளியாகியுள்ள ஒரு ப்ரோமோவில், ஓவியா மற்றும் காயத்ரி இருவரும் பிக் பாஸ் அறைக்கு வரவைக்கப்படுகின்றனர்.
அப்போது இருவரும் மனதில் படுவதை பேசுங்கள், பிக் பாஸ் வீட்டில் என்ன நடக்கிறது என்பதை மக்கள் தெரிந்துக்கொள்ள விரும்புகின்றனர் என கூறுகிறது பிக் பாஸ் குரல்.
இந்நிலையில் அவர்கள் முன்னிலையில் வைக்கப்பட்டுள்ள மைக்கை எடுத்து பிக் பாஸ் வீட்டின் வெளியே உள்ள ஓவியா வேறுமாதிரி இருக்கிறார். ஆனால் உள்ளே வேறுமாதிரி இருக்கிறார் என ஓவியாவை பார்த்து கேட்கிறார்.
இதற்கு பதிலளிக்கும் அவர் அடுத்தவர்கள் சொல்லும் விதத்தை வைத்து என்னை பார்க்காதீர்கள் என்று கூறி, உங்களை தவறாக நினைத்து விட கூடாது என்பதற்காகதான் நடித்தேன் என்று கூறுகிறார். இதனை கூறும்போது ஓவியா அழ ஆரம்பித்து விட இதனை நாள் ஓவியாவை விரோதியாக பார்த்த காயத்ரி ஓவியாவை கட்டி அணைத்து அழ வேண்டாம் என கூறி ஆறுதல் கூறுகிறார்.
இதனை நாள் பலராலும் தவறுதலாக புரிந்துக்கொள்ளப்பட்டு ஒதுக்கி தள்ளப்பட்ட ஓவியா இனி அனைவருடனும் இணைந்து இந்த வீட்டில் சந்தோஷமாக இருப்பார் என தோன்றுகிறது.