Asianet News TamilAsianet News Tamil

#Shilpa Shetty பிரபல நடிகை ஷில்பா ஷெட்டி மீது மோசடி வழக்கு பதிவு ; ரூ.1.51 கோடி பணத்தை ஏமாற்றிய தம்பதிகள் !!

பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் மீது ரூ.1.51 கோடி பணத்தை ஏமாற்றியதாக  புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Fraud case filed against popular actress Shilpa Shetty
Author
Chennai, First Published Nov 14, 2021, 5:52 PM IST

பிரபல நடிகை ஷில்பா ஷெட்டி லண்டனை சேர்ந்த ராஜ் குந்த்ராயை கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஐபிஎல் அணியான ராஜஸ்தான் ராயல்ஸின் உரிமையாளர்களில் ஒருவராக ராஜ்குந்த்ரா உள்ளார். இதை தவிர்த்து ஓட்டல்கள், தங்க வர்த்தகம், டெலிவிஷன் நிகழ்ச்சிகள் என பல்வேறு துறைகளில் அவர் வர்த்தகம் செய்து வருகிறார். இந்த தம்தியனாருக்கு 2 பிள்ளைகள் உள்ளன.

பிரபல ஜோடிகளான சமீபத்தில் மும்பையில் ஆபாச செயலி மூலம் மாடல்களை ஆபாசமாக படம் எடுப்பதாக வெளியான குற்றச்சாட்டின் பேரில் ராஜ்குந்த்ராவை சில மாதங்களுக்கு  காவல்துறையினர் கைது செய்தனர். அந்த வழக்கில் தற்போது அவர் பிணையில் விடுவிக்கப்பட்டிருக்கிறார்.  இந்த சம்பவம் தொடர்பாக  ஷில்பா ஷெட்டி, ராஜ்குந்த்ரா குறித்து சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்திருந்த நடிகை ஷெர்லின் சோப்ராவை நிழலுலக தாதாக்களை கொண்டு  மிரட்டியதாக ஷெர்லின் வெளியிட்ட பதிவு ராஜ்குந்தரா தம்பதியினருக்கு சிக்கலை ஏற்படுத்தி இருந்தது.

Fraud case filed against popular actress Shilpa Shetty

இந்நிலையில் பண மோசடியில் ஈடுபட்டதாக ஷில்பா ஷெட்டி, ராஜ்குந்த்ரா மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. நிதின் பராய் என்ற தொழிலதிபர் அளித்த புகார் மனுவில்; கடந்த 2014-ல் எஸ்.எப்.எல். என்ற ஃபிட்னஸ் நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது. இதில் முதலீடு செய்யுமாறு ஷில்பா ஷெட்டி, ராஜ்குந்த்ரா உள்ளிட்டோர் நிதின் பராயிடம்  ரூ. 1.51 கோடி பணம் கேட்டு, பெற்றுள்ளனர். ஒப்பந்தத்தின் அடிப்படையில் நிதினுக்கு ஒரு ஃபிரான்சைசும், ஜிம் மற்றும் ஸ்பா ஆகியவற்றை புனே அருகே அமைத்துத் தர வேண்டும். ஆனால் இவை நடைபெறாததால் கொடுத்த பணத்தை நிதின் திருப்பிக் கேட்டுள்ளார்.பணத்தை திருப்பி கொடுக்காமல், நிதினை மிரட்டியதாக ஷில்பா ஷெட்டி, ராஜ்குந்த்ரா மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் இருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios