female director raise question against the critics

காளி திரைப்படம் உதயநிதி ஸ்டாலினின் மனைவி, கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் , விஜய் ஆண்டனி நடிப்பில் நேற்று திரைக்கு வந்தது. இந்த திரைப்படத்திற்கு ஒரு பக்கம் நல்ல பாராட்டுக்கள் கிடைத்திருக்கிறது. இன்னொரு பக்கம் கொஞ்சம் கடுமையான விமர்சனங்களையும் சந்தித்திருக்கிறது இந்த திரைப்படம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

சில விமர்சகர்கள் காளி திரைப்படத்தை மிக மோசம் என விமர்சித்திருக்கின்றனர். இது போன்ற விமர்சனங்களால் கடுப்பான கிருத்திகா உதயநிதி , விமர்சகர்களையே விமர்சித்து ஒரு டிவிட்டர் பதிவை வெளியிட்டிருக்கிறார்.

#Kaali thank u all for all ur support! The riots connect d 3 incidences like a ripple effect.. n d villians connect d flashbacks in diff aspects.. as a husband nd as d village.. no reviewer noticed or mentioned it! 1/1

— kiruthiga udhayanidh (@astrokiru) May 18, 2018

அதில் முதல் கட்டமாக காளி படத்திற்கு , அனைவரும் அளித்திருக்கும் ஆதரவிற்கு நன்றி தெரிவித்திருக்கும் அவர் . மூன்று வெவ்வேறு சம்பவங்களால் ஏற்படும் ,தொடர் விளைவுகளை காட்சிப் படுத்தியிருக்கும் விதம் , படத்தில் வில்லன் கடந்த கால நிகழ்வுகளை வித்தியாசமான கோணத்தில் தொடர்பு படுத்தி பார்ப்பது , போன்ற பல நுணுக்கமான விஷயங்களை எந்த விமர்சகர்களும் கவனித்ததாகவே தெரியவில்லை. என தெரிவித்திருக்கிறார்.

I'm really happy dat #Kaali is out n getting great response wit d audience n sum reviewers! Thank u all! :)

— kiruthiga udhayanidh (@astrokiru) May 18, 2018

மேலும் பார்வையாளர்கள் மத்தியில் காளி திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதை நினைத்து தான் சந்தோசமடைந்ததாகவும், ஒரு டிவிட்டர் பதிவை வெளியிட்டிருக்கிறார் கிருத்திகா.