பொது இடத்தில் ரசிகர் செய்த செயல்..! பயந்து நடுங்கி ஓட்டம் பிடித்த நடிகை..! வைரலாகும் வீடியோ...!
பொதுவாக பிரபலங்களை ரசிகர்கள் எங்கு பார்த்தாலும், அவர்களிடம் சென்று ஆட்டோகிராப் வாங்கும் காலம் போய் இப்போது, செல்பி எடுக்கும் காலம் வந்துவிட்டது. எனவே, தங்களுக்கு பிடித்த, நடிகர் நடிகைகளை பொதுவெளியில் பார்த்தல் சற்றும் தயக்கம் இன்றி, தங்களுடைய மொபைல் போனில் போட்டோ எடுக்க முற்படுகின்றனர் ரசிகர்கள்.
பொதுவாக பிரபலங்களை ரசிகர்கள் எங்கு பார்த்தாலும், அவர்களிடம் சென்று ஆட்டோகிராப் வாங்கும் காலம் போய் இப்போது, செல்பி எடுக்கும் காலம் வந்துவிட்டது. எனவே, தங்களுக்கு பிடித்த, நடிகர் நடிகைகளை பொதுவெளியில் பார்த்தல் சற்றும் தயக்கம் இன்றி, தங்களுடைய மொபைல் போனில் போட்டோ எடுக்க முற்படுகின்றனர் ரசிகர்கள்.
இந்நிலையில் பிரபல பாலிவுட் நடிகை சாரா அலிகான், நியூயார்க் நாட்டிற்கு சென்று விட்டு, மும்பை திரும்பியுள்ளார். விமான நிலையத்தில் அவரை கண்ட ரசிகர்கள், அடுக்கடுக்காக ஒருவர் பின் ஒருவர் வந்து அவருடன் போட்டோ எடுத்து கொள்ள அனுமதி கேட்டு புகைப்படம் எடுத்து கொண்டனர்.
சாராவும் சற்றும் தயக்கம் இன்றி, அனைவருடனும் புகைப்படம் எடுத்துக்கொண்டார். இந்நிலையில் ஒரு ரசிகர் அவரின் இடுப்பில் கை வைத்து, புகைப்படம் எடுக்க முயன்றார்.
ஷாக் அடித்த மாதிரி உடனடியாக அந்த ரசிகரிடம் இருந்து விலகிய சாரா, இதனை முகத்தில் காட்டி கொள்ளாமல் மீண்டும் அவருடன் இணைந்து புகைப்படம் எடுத்து கொண்டார். மீண்டும் அந்த ரசிகர் தன் மீது கை வைத்து விடுவாரோ என்று பயந்து ஒரு ஜெர்க் கொடுத்தார் சாரா.
பின், சில ரசிகர்கள் தொடர்ந்து புகைப்படம் எடுக்க வந்தும், அவர்களை தவிர்த்து விட்டு அந்த இடத்தில் இருந்து சாரா ஓட்டம் பிடித்துள்ள, வீடியோ இப்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.