பிரபல நடிகை கவலைக்கிடம்?... தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை...!
இதனிடையே ஜெயந்தி கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகின.
இயக்குநர் கே.பாலச்சந்தரின் பல படங்களில் ஹீரோயினாக நடித்தவர் பழம் பெரும் நடிகை ஜெயந்தி. எதிர்நீச்சல், நீர்க்குமிழி உள்ளிட்ட பல படங்களில் நடித்து தனது அற்புதமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்துள்ளார். கர்நாடகாவை பூர்வீகமாக கொண்ட இவர், எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், நாகேஷ், ஜெமினி கணேஷன் உள்ளிட்ட பல நடிகர்களுடன் இணைந்து 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
இதையும் படிங்க: சிவகார்த்திகேயன், அவருடைய மனைவியுடன் இருக்கும் சின்ன வயசு போட்டோ... இதுவரை யாரும் பார்த்திடாத புகைப்படம்...!
தற்போது 75 வயதாகும் ஜெயந்தி மூச்சு திணறல் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மூச்சு திணறல் என்பதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மறுகணமே அவருக்கு அங்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அப்போது அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது தெரியவந்துள்ளது. இதனிடையே ஜெயந்தி கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகின.
இதையும் படிங்க: “வனிதாவை பச்சை பச்சையாக கிழிக்க காரணம் இதுதான்”... போலீசை கண்டும் அஞ்சாத சூர்யா தேவியின் அடுத்த வீடியோ...!
ஆனால் இந்த தகவல் முற்றிலும் பொய்யானது என தெரியவந்துள்ளது. அதாவது ஜெயந்திக்கு ஏற்கனவே ஆஸ்துமா பிரச்சனை இருந்தால், மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் தீவிர சிசிக்கை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தாலும், உடல் நலத்தில் நல்ல முன்னேற்றம் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 2020ம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே பாலிவுட் முதல் கோலிவுட் வரை திரைத்துறை பிரபலங்கள் மற்றும் டிவி நடிகர், நடிகைகள் உயிரிழப்பது தொடர்கதையாக உள்ளது. அதனால் பழம் பெரும் நடிகை ஜெயந்தி பற்றி வெளியான தகவலால் ரசிகர்கள் மிகுந்த கவலையடைந்தனர். இந்நிலையில் நடிகை ஜெயந்தி நலமாக இருப்பதாக வெளியான தகவல் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.