இந்த நடிகைக்கு இப்போது 48 வயது. ஆனால், இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை. அவர் திருமணம் செய்யாததற்கு காரணங்கள் எதுவாக இருந்தாலும், இதுகுறித்து பலருக்கும் கேள்விகள் உள்ளன. இந்தக் கேள்விகளுக்கு அந்த நடிகை இப்போது பதிலளித்துள்ளார். 

இந்த பாலிவுட் நடிகை தெரியுமா?

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இது ஒரு பாலிவுட் நடிகையின் புதிய நிலைப்பாடு. அது அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை. ஆனால், இவ்வளவு தைரியமான அறிக்கை ஏன் என்று கேட்கிறீர்களா? அது அவருடைய விருப்பம் என்று சொல்லலாம்!?

ஆம், இவர் பாலிவுட்டின் பிரபலமான அழகி. கடந்த மூன்று தசாப்தங்களாக திரையுலகில் பல வேடங்களில் நடித்த நடிகை. சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றுள்ளார். குளோபல் இந்தியன் ஃபிலிம் அவார்ட், ஐஃபா மற்றும் ஃபிலிம்பேர் விருதுகளையும் இந்த நடிகை வென்றுள்ளார்.

இப்படிப்பட்ட இந்த நடிகைக்கு இப்போது 48 வயது. ஆனால், இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை. அவர் திருமணம் செய்யாததற்கு காரணங்கள் எதுவாக இருந்தாலும், இதுகுறித்து பலருக்கும் கேள்விகள் உள்ளன. இந்தக் கேள்விகளுக்கு அந்த நடிகை இப்போது பதிலளித்துள்ளார். 48 வயதாகியும் ஏன் திருமணம் செய்யவில்லை என்பதற்கான காரணத்தை அவர் கூறியுள்ளார். அந்த நடிகை திவ்யா தத்தா.

இந்த நடிகை கூறியது என்ன?

'பிங்க்வில்லா'வுக்கு அளித்த பேட்டியில் இதுகுறித்து பேசிய திவ்யா தத்தா (Divya Dutta), 'நான் ஒருபோதும் திருமணத்திற்கு முக்கியத்துவம் கொடுத்ததில்லை' என்று கூறியுள்ளார். மேலும், 'நான் செய்த தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டதால், திருமணத்திற்கு முன்னுரிமை அளிக்கவில்லை' என்றும் அவர் கூறியுள்ளார்.

'முன்பு நான் பலருடன் உறவில் இருந்தேன். ஆனால் யாருடனும் எனக்குப் பொருந்திப் போகவில்லை' என்கிறார் திவ்யா தத்தா. மேலும், 'என்னைப் பொறுத்தவரை ஒரு உறவு என்பது வாழ்நாள் முழுவதும் ஒன்றாகப் பயணிக்க வேண்டும். கஷ்ட காலத்தில் ஒருவருக்கொருவர் துணையாக நிற்க வேண்டும். மகிழ்ச்சியிலும் ஒன்றாக இருக்க வேண்டும். ஆனால் என் முந்தைய உறவுகளில் இந்த அம்சங்கள் இல்லை. கொரோனா காலத்தில் எனக்கு என்ன வேண்டும் என்பது எனக்குப் புரிந்தது' என்றார்.

அதுமட்டுமல்ல, 'திரையுலகில் எப்போது என்ன நடக்கும் என்று சொல்ல முடியாது. என் தொழிலில் ஸ்திரத்தன்மை இல்லை. என் வாழ்க்கை முறைக்கும், தொழில் வாழ்க்கைக்கும் பொருந்தக்கூடிய ஒருவரே வேண்டும். நான் இப்போதும் காதலில் விழவும், காதலிக்கவும் தயாராக இருக்கிறேன். ஆனால் எனக்குத் திருமணம் செய்துகொள்ளும் எண்ணம் இல்லை' என்கிறார் திவ்யா தத்தா.

'காதல் என்பது இதயத்தின் விஷயம்'

'காதல் என்பது இதயத்தின் விஷயம். இதயத்தில் காதல் பிறக்கும்போது ஒரு வலுவான உறவு உருவாகிறது. திருமண பந்தத்தை விட எனக்கு அமைதியும் நிம்மதியும் முக்கியம்' என்கிறார் திவ்யா தத்தா.

1994-ல் பாலிவுட் திரையுலகிற்கு வந்த திவ்யா தத்தா, 2005-ல் லெப்டினன்ட் கமாண்டர் சந்தீப் ஷெர்கில் என்பவருடன் நிச்சயதார்த்தம் செய்துகொண்டார். சண்டிகரில் இந்த நிச்சயதார்த்த விழா நடைபெற்றது. ஆனால் அதன் பிறகு என்ன ஆனதோ, இந்த நிச்சயதார்த்தம் முறிந்து போனது. திவ்யா தத்தா நிச்சயதார்த்தம் நடந்த செய்தியை ஏற்கவும் இல்லை, நிச்சயதார்த்தம் முறிந்த செய்தியை மறுக்கவும் இல்லை.

மாறாக, 'இந்தியா ஃபோரம்' தளத்திற்கு அளித்த பேட்டியில், 'சந்தீப்பும் நானும் கடந்த ஆண்டு சண்டிகரில் நிச்சயதார்த்தம் செய்துகொண்டோம் என்று மக்களுக்கு விளக்குவது மிகவும் சங்கடமான விஷயம்' என்று கூறியிருந்தார். 'நிச்சயதார்த்தத்திற்கும் திருமணத்திற்கும் எந்த வித்தியாசமும் இல்லையா?' என்றும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதே நேரத்தில், நடிகை திவ்யா தத்தா வெள்ளித்திரையில் இருந்து சின்னத்திரைக்கு மாறினார். 'ஷன்னோ கி ஷாதி' என்ற தொடரில் நடித்தார். இந்த நேரத்தில், தொடரின் சக நடிகர் விகாஸ் பல்லாவுடன் இவரது பெயர் இணைத்துப் பேசப்பட்டது. நிச்சயதார்த்தம் முறிய இவர்களது நெருங்கிய உறவே காரணம் என்று கூறப்பட்டது. இந்தச் செய்தியையும் திவ்யா தத்தா மறுக்கவில்லை.

அதன் பிறகு விகாஸ் பல்லா, மூத்த நடிகர் பிரேம் சோப்ராவின் மகள் புனீதாவை மணந்தார். இப்படி முறிந்த நிச்சயதார்த்தம் மற்றும் சக நடிகருடனான காதல் விவகாரத்தால் அப்போது செய்திகளில் இடம்பிடித்த திவ்யா தத்தா, பின்னர் தனது படங்கள் மற்றும் கதாபாத்திரங்களால் கவனம் பெற்றார். தற்போது தனது திருமணம் குறித்த இந்த தைரியமான அறிக்கையால் மீண்டும் செய்திகளில் இடம்பிடித்துள்ளார். அவரது பேச்சு இப்போது சமூக ஊடகங்களில் விவாதப் பொருளாகியுள்ளது.