செல்ல மகனுடன் செல்வராகவன்... முதன் முறையாக 3வது குழந்தையின் வீடியோவை வெளியிட்ட கீதாஞ்சலி...!
இந்நிலையில் பிறந்து 8 நாட்களே ஆன செல்ல மகனின் ரிஷிகேஷின் பிஞ்சு விரல்களை பற்றிய படி இயக்குநர் செல்வராகவன் இருக்கும் வீடியோ ஒன்றை கீதாஞ்சலி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
நடிகை சோனியா அகர்வாலுடனான விவாகரத்திற்கு பிறகு செல்வராகவன் இயக்கிய “மயக்கம் என்ன” படத்தில், துணை இயக்குனராக பணியாற்றிய கீதாஞ்சலி என்பவருக்கும், இவருக்கும் இடையே காதல் துளிர் விட்டு அது திருமணத்திலும் முடிந்தது. 2011 இல் திருமணம் செய்துகொண்ட தம்பதியருக்கு 20 ஜனவரி 2012 அன்று பிறந்த மகள் லீலாவதி மற்றும் ஒரு மகன் ஓம்கர் 7 அக்டோபர் 2013 இல் பிறந்தனர்.
இதையும் படிங்க: பொன் நகை அணிந்து புன்னகையுடன் பொங்கல் வைத்த நயன்தாரா... வைரலாகும் அழகு போட்டோ...!
இதனிடையே 3வது முறையாக கீதாஞ்சலி கர்ப்பமானார். Pregnancy belly உடன் கலக்கலான மார்டன் உடையில் விதவிதமான போட்டோ ஷூட்களையும் நடத்தியிருந்தார். அவை அனைத்தும் சோசியல் மீடியாவில் வெளியாகி தாறுமாறு வைரலானது. புதிதாக ஒரு குடும்ப உறுப்பினரை காத்திருந்தவர்களுக்கு பரிசாக கடந்த ஜனவரி 7ம் தேதி அழகி ஆண் குழந்தை பிறந்தது.
ஏற்கனவே குழந்தைக்கு பெயரை முடிவு செய்திருந்த செல்வராகவன் - கீதாஞ்சலி தம்பதி, 3வது குழந்தை பிறந்திருப்பதையும், ரிஷிகேஷ் செல்வராகவன் என பெயர் வைத்திருப்பதையும் தெரிவித்திருந்தனர். இதையடுத்து சோசியல் மீடியாவில் வாழ்த்துக்கள் குவிந்தது. அதேபோல் ரிஷிகேஷ் செல்வராகவன் போட்டோவை வெளியிடும் படி ரசிகர்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.
இதையும் படிங்க: பிக்பாஸ் வனிதா வீட்டில் நடந்த விசேஷம்... வாழ்த்துக்களுடன் வைரலாகும் போட்டோ...!
இந்நிலையில் பிறந்து 8 நாட்களே ஆன செல்ல மகனின் ரிஷிகேஷின் பிஞ்சு விரல்களை பற்றிய படி இயக்குநர் செல்வராகவன் இருக்கும் வீடியோ ஒன்றை கீதாஞ்சலி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அப்பா - மகனின் அழகான தருணத்தை விவரிக்கும் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அத்துடன் எங்களுக்கு கிடைத்த பொங்கல் பரிசு... குழந்தை ரிஷிகேஷ்!! தன்னுடைய ஓய்வு நாட்களில் கிடைக்கும் நேரங்களை தற்போது இருப்பதைப் போல் செலவிட்டு வருகிறார் என குறிப்பிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ....