கண்டுகொள்ளாத சூர்யா... வில்லனை ஹீரோவாக்கும் பாலா! 18 கிலோ உடல் எடையை அதிரடியாக ஏற்றும் நடிகர் யார் தெரியுமா?
இயக்குனர் பாலா இயக்கத்தில் கடைசியாக நடிகை ஜோதிகா அதிரடி போலீஸ் அதிகாரியாக நடித்த 'நாச்சியார்' திரைப்படம் வெளியானது. இந்த படத்தில், ஜி.வி.பிரகாஷ் மற்றும் இவானா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர்.
இயக்குனர் பாலா இயக்கத்தில் கடைசியாக நடிகை ஜோதிகா அதிரடி போலீஸ் அதிகாரியாக நடித்த 'நாச்சியார்' திரைப்படம் வெளியானது. இந்த படத்தில், ஜி.வி.பிரகாஷ் மற்றும் இவானா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர்.
இந்த படத்தை தொடர்ந்து, இவர் நடிகர் விக்ரம் மகன் துருவை வைத்து இயக்கிய அர்ஜுன் ரெட்டி தெலுங்கு பட ரீமேக் 'வர்மா' எதிர்பார்த்தது போல் வரவில்லை என, மீண்டும் மற்றொரு இயக்குனரை வைத்து இயக்கி இந்த படத்தை வெளியிட்டது தயாரிப்பு நிறுவனம்.
இந்நிலையில், இந்த படத்தை தொடர்ந்து, நடிகர் சூர்யா நடிக்க உள்ள படத்தை பாலா இயக்குவார் என பேச்சு அடிபட்டது. ஆனால் சூர்யா, அதனை சற்றும் கண்டுகொள்ளாமல், இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிக்க உள்ளதாக உறுதியான தகவல் வெளியானது.
மேலும் செய்திகள்: தற்கொலை முயற்சிக்கு முன் ஜெயஸ்ரீ அனுப்பிய வாய்ஸ் நோட்ஸ்... ரேஷிமா வெளியிட்ட உண்மை!
எனினும் விரைவில் இயக்குனர் பாலா இயக்க உள்ள புதிய படத்தின் தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிது. இந்த படத்தில், பாலா இயக்கிய 'தாரதப்பட்டை' படத்தில் மிரட்டல் வில்லனாக நடித்த ஆர்.கே.சுரேஷ் கதாநாயகனாக நடிக்க உள்ளாராம்.
மேலும் இந்த படத்திற்காக தற்போது 18 கிலோ உடல் எடையை அதிகரிக்கும் முயற்சியிலும் அவர் இறங்கி உள்ளாராம். எனவே விரைவில் இந்த படம் குறித்த மற்ற தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகள்: பட்டு புடவையில் பொங்கல் வாழ்த்து கூறிய இடுப்பழகி ரம்யா பாண்டியன்!