நடிகைக்கு கணவருடன் கருத்து மோதல்..!! பெரிய வீட்டு மருமகளுக்கு ஏற்பட்ட மனகசப்பு..??
செல்வாக்கான குடும்பத்தின் மருமகளான சமந்தா தமது குடும்ப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை தொடர்ந்து தவிர்ப்பது ஏன் என்கிற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது .
தமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா மற்றும் அவரது கணவர் நாக சைதன்யாவிற்கிடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது இதனால் குடும்ப விழாக்களை சமந்தா புறக்கணித்து வருவதாகவும் கூறப்படுகிறது . தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார் நடிகை சமந்தா . இதனால் நாகார்ஜுனாவின் வீட்டு மருமகளாக மாறிய சமந்தா திருமணத்திற்கு பிறகும் நடித்து வருகிறார் . சமீபத்தில் அக்கினோனி தேசிய விருது வழங்கும் விழா நடைபெற்றது .
நாகார்ஜுனாவின் குடும்ப விழாவான இதில் அவரது மருமகளான நடிகை சமந்தாவை தவிர மற்ற உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர் . திருமணமான ஆரம்ப காலத்தில் சமந்தா இல்லாமல் அவரது வீட்டு விசேஷங்கள் எதுவுமே நடந்ததில்லை , ஆனால் இந்நிலையில் மிக முக்கியமான விழாவான இதில் சமந்தா கலந்து கொள்ளாதது பெரும் கேள்வியை ஏற்படுத்தியுள்ளது . இதில் பல்வேறு திரை பிரபலங்களும் பங்கேற்றனர் , ஆனால் " தீ பேமிலி மேன்" படப்பிடிப்பில் அவர் பிஸியாக இருப்பதாக கூறப்படுகிறது இதைத்தொடர்ந்து நாகர்ஜுனா குடும்பத்தில் நாகேஸ்வரராவின் பேரன் ஆதித்யாவிற்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது அதிலும் நடிகை சமந்தாவை காணவில்லை , இது திரையுலகில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது .
செல்வாக்கான குடும்பத்தின் மருமகளான சமந்தா தமது குடும்ப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை தொடர்ந்து தவிர்ப்பது ஏன் என்கிற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது . குறிப்பாக கணவர் நாக சைதன்யா இந்த நிகழ்வுகளில் கலந்து கொள்ளும்போது சமந்தா மட்டும் கலந்து கொள்ளாதது ஏன் என்றும் திட்டமிட்ட குடும்ப விழாக்களை சமந்தா புறக்கணிக்கிறாரோ என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது .